ஊர்:தலைக்காவேரி#தலக்காடு
இறைவன்:அகஸ்தீஸ்வரர்
இறைவி:காவேரியம்மன்
பிறசன்னதிகள்: பிரம்ம குண்டிகை(ஜலரூபிணி-லோபமுத்ரா)
தீர்-கல்யாணகுளம்
தி.நே-06-19
# 05-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
ஸ்ஹ்யாத்ரி என்ற குடகு மலையில் காவேரி உற்பத்தியாகுமிடம். லோபமுத்ரா வை உருவாக்கிய விஷ்ணு பிரம்மனிடம் அளிக்க தனக்கு மகள் வேண்டுமென்று தவமிருக்கும் கவேர மகரிஷியிடம் லோபமுத்ராவை அளித்தார். காவிரியின் அம்சமாக உதித்தவள் லோபமுத்திரை. வேகமானவள் என்பதால் கர்வமுடையவளாக இருக்க அங்கு வந்த அகத்தியர் மணந்தார். பிரம்மகிரிக் குன்றின் மருபுறத்தில் இருக்கும் கனிக நதிக்கு செல்லவேண்டி இருப்பதால் லோபமுத்ராவை நீர் வடிவமாக்கி கமண்டலத்தில் நிரப்பி தன் சீடர்களிடம் ஒப்படைத்து சென்றார். கமண்டலத்தில் அடைபட்டுக்கிடந்த லோபமுத்ரா தன் பிறப்பு எதற்காக என்பதை உணர்ந்து தனக்கு நீர் வடிவம் அளித்த அகத்தியருக்கு நன்றி நினைத்து இருக்க பிள்ளையார் காகம் வடிவில் வந்து கமண்டலத்தை கவிழ்க்க காவிரியாக பெருக்கெடுத்து ஓடினாள். லோபமுத்ரா வெளியில் வந்த் இடம் இந்த பிரம்ம குண்டிகை என்ற புண்ணிய ஊற்று. அகத்தியர் மணல் லிங்கம் அமைத்து வழிபட்டது-அகஸ்தீஸ்வரர். ஐப்பசி(அக்டோபர்) மாதன் சூரியன் துலா ராசியில் பிரவேசிக்கும் நேரம் தீர்த்தோத்பவம்- காவேரி சங்கராந்தி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)