ஊர்: பாகமண்டல்#
மூலவர்:
இறைவன்: பாகண்டேஸ்வரர்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: விநாயகர்,விஷ்ணு,சுப்ரமண்யர்
மரம்:
தீர்: காவிரி, கன்னிகா(கனகநதி), சுஜோதி(கஜ்யோதி) நதிகள் சங்கமம்
தி.நே-0600-1330,15-1900
#-14-09-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது
11- நூற்றாண்டு கலையம்சமிக்க கோவில்.
காவிரி, கன்னிகா, சுஜோதி நதிகள் சங்கமம் ஆகுமிடம்.
சூரியன் துலாராசிக்கு மாறும் காலத்தில் அக்டோபர் 17/18 தேதிகளில் சங்கம்த்தில் நீராடி முன்னோர்களுக்குத் திதி.
பகண்ட முனி என்பவரால் பிரதிஷ்டை-பகண்டேஸ்வரர்.
திப்புவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பதியான இது அப்சலாபாத் என அழைக்கப் பட்டு தொட்ட வீரராஜேந்திரனால் மீட்கப்பட்டு குடகு ராஜ்யத்திற்கு உட்பட்ட பகுதியாக மாற்றி தினமும் பூஜைகள் நடைபெற வழிவகுத்தான்.
குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொறு ராசிக்கு மாறும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழா புஷ்கரம். மூன்றரைக் கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கரம் என்பவர் குரு பெயர்ச்சியின்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாட்களுக்கு பிரவேசம் செய்வதால் தீர்த்தவாரி சிறப்பு. 144 ஆண்டுகள் கழித்து 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி முதல் 24வரை 12 நாட்கள் புஷ்கரமானவர் காவரியின் ராசியான துலாராசிக்கு பிரவேசம் செய்வதாலும் பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவர்கள், ரிஷிகள் ஆகியோரும் வாசம் செய்வதால் இது மகா புஷ்கரமாக சிறப்பு கொள்கின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)