ஊர்: கிக்கெரி,ஏரியின்கரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபிரமேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபார்வதி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅர்ஜுனேஸ்வரர், ஸ்ரீசென்னகேசவர், ஸ்ரீகணபதி, ஸ்ரீமுருகன், ஸ்ரீகாலபைரவர்,
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
1117-ம் ஆண்டு பம்மவ்வே நாயகி, பரமய்ய நாயக என்ற தம்பதியினர் கட்டிய கோவில். பரமஅநாயக முதலில் பிரம்மனுக்கு கோவில் கட்ட விருப்பமுடன் ஆரபிக்க சிவன் அவர் கனவில் தோன்றி அருள் புரிந்ததால் ஸ்ரீபிரம்மேஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. நுழைவு வாயிலில் சிறிய பிரம்மன் உருவம்.
தலவரலாறு: உடதடி என்ற ஊரில் உள்ள செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பெண் மகாதேவியின் அழகைக் கண்டு மன்னன் கௌசிகன் அவள் பெற்றோரை மிரட்டி திருமணம் செய்தான். ஆனால் மகாதேவி நான் சிவபூஜை செய்யும்வரை என்னைத் தொடக்கூடாது என்ற நிபந்தனையில் திருமணம் செய்து கொண்டாள். சிவ பூஜை தொடர பொறுமை இழந்த கௌசிகன் அவளை தீண்ட முயற்சித்தான். அப்போது மகாதேவி என் பக்தி புரியாத உனக்கு என் உடல் மீதுதானே ஆசை. என்று ஆடைகளை களைய முற்பட அவள் கூந்தல் அபரிதமாக வளர்ந்து அவள் உடலை மூடியதைக் கண்ட கௌசிகன் அவளிடம் ம்ன்னிப்பு கேட்டான். அரண்மனையிலிருந்து கிளம்பிய மகாதேவி அடியார்களுடன் சேர்ந்து சிவத் தொண்டு செய்து வர அக்கா என அழைக்கப்பட்டு அக்கமாதேவி யானாள். தன் லட்சியமான ஸ்ரீ மல்லிகா அர்ஜுனரை தரிசிக்க ஸ்ரீசைலம் சென்று தரிசித்து நானூறு பாடல்களை அவர்மீது பாடினாள். அருகில் இருந்த குகையில் பல ஆண்டு தவம் செய்து ஜோதியில் கலந்தார்.
ஸ்ரீசைலம் வனப்பகுதியில் அக்கமா தேவியின் குகை உள்ளது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)