ஊர்: நுக்கேஹள்ளி,விஜயசோமநாதபுரா
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசதாசிவர்
இறைவி: ஸ்ரீபார்வதிதேவி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீசப்தமதர்கள், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீவிஷ்ணு
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
மன்னர் சோமேஸ்வரர் 1249-ம் ஆண்டில் கட்டியுள்ளார், நட்சத்திரவடிவ பீடத்தின்மீது ஏககூட அமைப்பில் கட்டப்பட்ட கோவில்
தலவரலாறு: குஜராத்தின் பிரபாசபட்டினத்தின் ஆதையா சிவதலங்களுக்குச் சென்று தரிசிக்க புலிகெரே-லஷ்மேஷ்வர் தலத்திற்கு வந்தான். எந்த கோவிலாக இருந்தாலும் அங்கிருக்கும் சிவனை சோமநாதா என்றுதான் வணங்குவான். சோமநாதர்மேல் அவனுக்கு அவ்வளவு பற்றுதல். இங்கு ஒரு பெண்னைக் கண்டவுடன் காதல் கொண்டான் அவள் சம்மதிக்க திருமணம் செய்தான். பின்புதான் அவள் சமண மதத்தைச் சார்ந்தவள் எனத் தெரிய வந்தது. மனமுடைந்தவன் மண பந்தத்தை உடைத்துக் கொண்டு ஊருக்குச் செல்ல தீர்மானிக்க அவன் மனைவி என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள் இல்லையென்றால் உயிரை மாய்த்துக்கொள்வேன் என்றாள். அவளும் சைவ மதத்திற்கு மாறினாள், இருவரும் அங்கேயே இல்லறம் நடத்தினார்கள்.
மகளின் இந்த மத மாற்றத்தை பெற்றோர்கள் விரும்பவில்லை. தம்பதியர் இருவரும் மனம்கோனாமல் சிவனடியார்களுக்குத் தொண்டு செய்து வந்தனர். ஒருநாள் ஆதையா சிவனடியார் சிலருக்கு உணவு படைக்க விரும்ப அவன் மனைவி உணவுதயாரிக்க அவள் பெற்றோர்கள் அவ்உணவை சமணர்களுக்கு கொடுத்தனுப்பி விட்டனர். ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்க அவனை இழிவாகப் பேசி, நீ உண்மையான சிவபக்தனாக இருந்தால் உன் ஊரிலிருக்கும் சோமநாத லிங்கத்தை இங்கு சமண ஆலயத்தில் பிரதிஷ்டை செய். அப்படி நீ செய்தால் நாங்களும் சைவத்திற்கு மாறுகின்றோம் என்றனர்.
ஒரு மாதத்திற்குள் கொண்டு வருகின்றேன் என்று கிளம்பியவன் ஊர் நோக்கி நடக்கத் தொடங்கினான். காலில் காயம்பட்டு குருதிவடிய ஊண் உறக்கமின்றி நடந்து பிரபாசபட்டினத்தை அடைந்தான். சோமநாதர் அவன் பக்தியை மெச்சி லிங்கரூபம் ஒன்றை அவனுக்கு அளித்தார். அதைக் கொண்டு வந்தும் அவர்கள் அவனை ஏளனமாக பேச அவன் அவர்களிடம் உங்களது சமண ஆலயத்தை திறந்து அங்குள்ள விக்ரகத்தைக் காட்டுமாறு சொன்னான். அப்போது சமண ஆலயத்தின் கதவை திறக்க முயற்சித்தவர்கள் என்ன முயன்றும் கதவு திறக்கவில்லை. பட்டத்து யானையும் திறக்க முயற்சித்தும் கதவு திறக்கவில்லை. அனைவரும் ஆதயனிடம் மன்னிப்புகோர ஆதயன் கதவின் முன் அமர்ந்து சோமநாதனை பிரார்த்தனை செய்ய கதவு தானாக திறக்க கையிலிருந்த லிங்கத்தை அங்கு ஸ்தாபித்தான். அன்றிலிருந்து ஜைனாலயம் சிவாலயமாக ஆனது. சிவ வழிபாடு அந்தப் பகுதியில் பிரபலமானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)