ஊர்: கோட்டா
மூலவர்: ஸ்ரீஅம்ருதேஸ்வரி
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமாரிகாம்பா, ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீநாகதேவதை, ஸ்ரீபொப்பர்யா, ஸ்ரீஉன்னத்தி என்ற கிராம தேவதைகள்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-1900
தலபுராணம்- இராவணனின் சகோதரன் கராசூரனின் மனைவி கும்பமுகியும் இராவணன், கராசுரனின் சகோதரி சூர்ப்பனகையும் காட்டில் பூ பறிக்கச் சென்றவர்கள் திசை மாறி பிரிந்துவிட்டனர். விதவைத்தாயார் அதிபிரபாவுடன் வந்திருந்த பஹுஷ்ருதா என்ற ஆடவனை மோகித்து தன்னை மணக்க சூர்ப்பனகை வேண்ட அவன் மறுக்க அவனைக் கொன்றுவிட்டாள். மகனின் அலறல் சப்தம் கேட்ட அங்கு வந்த அதிபிரபா மகனின் முடிவு கண்டு அழுதாள். அப்போது கும்பமுகியும் அங்கு வந்து சேர்ந்தாள். கும்பமுகிதான் தன் மகனைக் கொன்றிருக்க வேண்டும் என்று தவறாக நினைத்து அவளை நீ வாரிசு இன்றி இருக்க கடவுது என்று சாபமிட்டாள். பின்னர் உண்மை தெரிந்த அதிபிரபா அழகிய ஆண்மகனால் ஈர்க்கப்பட்டு நீ நிராகரிக்கப்படுவாய். உன்னால் உன் அரச குடும்பம் அழியும் என சூர்ப்பனகைக்குச் சாபமிட்டு மலை உச்சியிலிருந்து குதித்து இறந்தாள். இந்த நிகழ்வை கும்பமுகி தன் கணவனிடம் சொல்ல இருவரும் தங்கள் குல குருவிடம் ஆலோசனை செய்ய, அசுரகுலச் சிற்பி மாயாசூரனிடமிருந்து ஒரு ஜேஷ்ட லிங்கம் பெற்று ஒருவருடம் அதைப் பூஜிக்கச் சொன்னார் சுக்ராச்சாரியார். அப்படியே செய்தர்கள். கும்பமுகி பார்வதி தேவியை அம்ருதேஸ்வரியாக வணங்கினாள். கராசுரன் முன்பு ஈசன் தோன்றி நீ ஸ்ரீ ராமரிடம் போரிட்டு மடிந்து மோட்சம் அடைவாய் என்றார். பார்வதி கும்பமுகிக்கு காட்சி கொடுக்கும்போது தன்னை மறந்த நிலையில் நான் பல குழந்தைகளுக்கு தாயாக வேண்டும். அக்குழந்தைகள் சிவலிங்கம் போல இருக்கவேண்டும் என்று வரம் கேட்டு பெற்றாள். கராசுரன் ராமசந்திரனால் மோட்சம் அடையும்போது நீ என்னுள் ஐக்கியமாவாய் என்று பார்வதி தேவி அருள் புரிந்தாள். சீதையைத் தேடி ராமர் ஸ்ரீலங்கை சென்றபோது கராசுரனுடன் போரிட்டு அவனைக் கொன்றார் கும்பமுகி அம்ருதேஸ்வரியுடன் ஐக்கியமானாள். அப்போது ஏராளமான சிவலிங்கங்கள் தோன்றின. அங்கு துர்மரணம் அடைந்து பிரம்ம ராட்ஷசனாகி திரியும் பஹூருதா முனிவர்கள் யாகத்தில் அவிர்பாகத்தை எடுத்துச் சொல்ல முனிவர்கள் சக்தியை வேண்ட அவனை அம்ருதேஸ்வரியாக அவனைக் கொன்று மோட்சம் அளித்தாள்.
கருவறையைச் சுற்றிலும் நிறைய சிரு சிறு லிங்கங்கள்.. குழந்தை பாக்கியம் வேண்டி வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)