ஊர்:திருஅஞ்சைக்களம்.தி.த-266.ஸ்ரீவாஞ்சிகுளம்
இறைவன்:ஸ்ரீஅஞ்சைகளத்தீஸ்வரர், ஸ்ரீமகாதேவர்
இறைவி:ஸ்ரீஉமையம்மை
பிறசன்னதிகள்: ஸ்ரீநடராசர், ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீதுர்கா பகவதி, ஸ்ரீஅனுமன், ஸ்ரீஐயப்பன், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீநாகராணி, ஸ்ரீபசுபதி, ஸ்ரீசேரமான்பெருமான், ஸ்ரீஉண்ணதேவர், ஸ்ரீசப்தமாதர்கள், ஸ்ரீசுந்தரர், ஸ்ரீபார்வதி, ஸ்ரீபரமேஸ்வரன், ஸ்ரீசக்தி பஞ்சாக்ஷரி , ஸ்ரீகொன்னக்கல் சிவன் இருபிரஹாரங்கள் தீர்-சிவகங்கை. தீர்த்தக்கிணறு. மரம்-சரக்கொன்றை.
தி.நே- 0500-1100,1700-2000
தொலைபேசி- 0480 2812061
900ஆண்டுகள் பழமை. சேர மன்னன்(பெருமாக் கோதையார்) ராஜசேகரா கோவிலைக் கட்டினார். உட்பிரகாரத்தில் மூலிகைகளைக் கொண்டு எழில்மிகு ஓவியங்கள். பரசுராமர் தாயைக்கொன்ற பாவம் தீர வழிபட்டது.
கயிலாயத்திலிருந்து வெள்ளை யாணை வந்து சுந்தரரை ஆடி-சுவாதி அன்று ஏற்றிச் சென்ற தலம்-விழா. எகாதசருத்ரம் சங்காபிஷேகம், ம்ருத்யஞ்ச ஹோமம் விஷேசம். சேரமான் கழற்றிவார் நாயானார் சிவனடியார்களுக்கு தொண்டாற்றி வந்தார். சுந்தரர் தம்மை நேரில் காண வருகின்றார் என்றதும் ஆனந்தமடைந்து எதிர்கொண்டழைத்து பரவசமடைந்தார். இருவரும் நீராட சுந்தரர் அஞ்சக்களத்தீஸ்வரரை தரிசிக்கச் சென்று "தலைக்குத் தலை மாலை" பதிகம் பாடினார். பாடப்பாட உலக வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றியது. அந்த உணர்வை ஈசன் உணர்ந்தார். உடன் வெள்ளையாணைக்கு சுந்தரரை அழைத்துவர ஆணையிட்டார். வெள்ளையானையுடன் வந்த தேவகணங்கள் ஈசனின் கட்டளையை தெரிவுக்க யானைமேல் ஏறும்போது பரவையாரை, சங்கிலியாரை நினைக்கவில்லை, தன் நண்பர் சேரமனை நினைக்கின்றார். அந்த நினைவு அவரைச் சென்றடைகின்றது. உடன் தன் குதிரைமீதேறி அதன் காதில் ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசிக்க அது பறந்து வெள்லையானையை சுற்றி வந்து அதன் முன் சென்றது. சுந்தரர் இறைவனின் கருணையை எண்ணி வியந்தார் சேரமான் சுந்தரருடன் சேர்ந்து திருக்கயிலாயம் சென்றார்.
63/63-சேரமான் பெருமான் நாயானார். சுந்தரர்-பாடல் பெற்ற தலம்.
மார்கழி, மகாசிவராத்திரி 10000 அகல்விளக்குகல் ஒளியில் கோவில்.
கொடுங்களூர் ஆலயத்திலிருந்து 3 யானைகள் வந்து பற எனும்தானியளவில் வைத்துள்ள நெல்லை தொட்டு வணங்கும் விழா.
சுவாமி அம்பிகை இருவரும் ஒரே கருவறையில். மூலஸ்தானத்தின் இடது பக்கம்-நான்முகன்-கலைமகள், வலது பக்கம் விஷ்ணு-திருமகள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)