ஊர்:தலப்பிள்ளி,வில்வாமலை,பதினெட்டரைகுன்று.நீளாநதிக்கரை.
இறைவன்:வில்வாத்திரிநாதர்
இறைவி:
பிறசன்னதிகள்:ராமர்
தீர்-கணபதி,பாபநாசினி.
தி.நே-04-12,17-19
21தலைமுறை சத்திரியர்களை கொன்ற பாவம் தீர பரசுராமர் வருந்த அவர் நிலை கண்டு சிவன் கயிலாயத்தில் நித்திய பூஜையில் தான் பூஜித்த விஷ்னு சக்கரத்தை அளித்து ஆசி வழங்க பரசுராமர் விச்வாமலையில் பிரதிஷ்டை செய்து வழிபாடு. பித்ரு தர்பணம் செய்ய சிறந்த தலம். பஞ்ச பாண்டவர்கள் பித்ரு தர்பணம் செய்ய இங்கு வந்தனர். கிருஷ்ணரின் முன்னிலையில் பித்ரு தர்பணம் செய்தனர். கிருஷ்ணர் தோன்றிய இடம் ஐவர்மடம். 2 விஷ்ணு விக்ரகங்கள்- கிழக்கு, மேற்கு. காசியப மகரிஷியின் புதல்வன் ஆமலகன் சரஸ்வதிக்குழி எனுமிடத்தில் தங்கி நெல்லிக் கனியை மட்டுமே உண்டு ராம நாம ஜபத்துடன் கடும் தவம்- சுயம்பு விக்ரகமாகமாறி ஸ்ரீராமர் என்ற நாமத்துடன் மேற்கு கோவிலில். இந்த விக்ரங்களின் சிறப்பை அறிந்த அரக்கர்கள் மேற்கு சிலையை அசைக்க சிவன் தோன்றி அரக்கர்களை அடக்கி தெற்குப் பகுதியில் உள்ள குகையில் அடைத்தார் -ராட்ஸசபாறை. மேலும் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் சிவன் சக்தியும் அந்த விக்ரகத்தில் உறைந்தது.- வில்வாத்திரிநாதர். சோமவாரம், பிரதோஷம், சிவராத்திரி சிறப்பு. அருகே வரமுடியாமல் போன அரக்கர்கள் தூரத்திலிருந்தபடியே தீவைக்க அனுமான் தோன்றி அன்றிலிருந்து இன்றவரை காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். கிழக்கே உள்ள புனர்ஜனி குகை பரசுராமர் விருப்பபடி தேவேந்திரன் விஸ்வகர்மாவைக் கொண்டு உருவாக்கிய குகை. என்றும் வற்றாத கணபதி தீர்த்தத்தில் குளித்து குகையில் நுழைந்து மேற்குப் பகுதியை அடைந்து அங்குள்ள பாபநாசினியில் குளித்து மீண்டும் குகை வழிவந்தால் ஒரு ஜென்மம் முடிந்ததாக கருதப்படுகின்றது. கார்த்திகை மாதம் சுக்கிலபக்ஷ ஏகாதசியன்று சிறப்பு-பிறவிப்பாவம் நீங்கும். தென் மேற்கு மூலையில் ஆலமரமத்தில் எல்லா தேவர்களும் உறைந்துள்ளனர். மேற்குப்பகுதி படி வழி இறங்கினால் சரஸ்வதி குழி. திரிமதுரம், அப்பம் ஆகியன நெய்வேத்தியம். புரட்டாசி 8,9,10 தேதிகளில் சூரிய ஒளி கிழக்கு கோவிலும் அஸ்தமனக் கதிர்கள் மேற்கு கோவிலிலும் உள்ள விக்ரங்கள் மீது ஒளிரும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)