ஊர்: எலப்புள்ளிப்பாறை, தெனாரி கோவில், ராமதீர்த்தம்
மூலவர்: ஸ்ரீராமர்,லட்சுமணர்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீ அனுமன்.
மரம்: வேம்பு
தீர்: ராமதீர்த்தம்
கேரள தாந்திரீக முறைப்படி இருகால பூஜைகள். தி.நே-0700-1200,1700-2000
தலவரலாறு: வனவாச காலத்தில் இப்பகுதியில் இருக்கும்போது ஒருநாள் இராமர் போகநாத நதியில் நீராடி விட்டு தன் மரவுரியையும் அம்பாராத்துணியையும் லட்சுமணனை எடுத்துவரச் சொல்ல அதை லட்சுமணன் கவனியாததால் மீண்டும் இராமர் சொல்ல லட்சுமணன் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். உடனே அசரீரியாக அண்ணன் சொல் தட்டிய பாவம் மேலும் அவரை வணங்கும் தகுதி இல்லை என்றது. வருந்திய் லட்சுமணன் அதற்கு பரிகாரமாக கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தால் பாவம் நீங்கும் என்றது. கங்கை சென்று வர கால தாமதம் ஆகும் என்பதால் மலைத்து நின்ற லட்சுமணுக்கு அப்பகுதி வந்த ஞான ஸ்ருதி என்ற மகரிஷி கங்கையை பிரார்த்தனை செய்து நீராடி அருகில் உள்ள மத்தியானேஸ்வரரை வழிபட்டு யாகம் செய்தால் பாவங்கள் நீங்கும் என்றார்.
லட்சுமணன் நிலை அறிந்து ராமர் அம்பை தொடுக்க கங்கை உற்பத்தியானாள். அதில் நீராடிய லட்சுமணன் காயத்திரி மந்திரத்தை ஜபித்து விட்டு மத்தியானேஸ்வரரை வழிபட்டான் யாகம் வளர்த்து பூஜை செய்தான். காசி விஸ்வநாதர் காட்சி கொடுத்து அவன் பாவம் நீக்கினார். இராமரும் கங்கையில் நீராடி விஸ்வநாதரை தரிசனம் செய்தார்..- இப்பகுதி இராம தீர்த்தம் எனப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)