ஊர்: அகர்மால்வா
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபைஜிநாத்
இறைவி:
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
போர்க்களத்தின் நடுவே வெற்றியின் விளிம்பில் இருந்த அந்த ஆங்கிலேய தளபதிக்கு தாங்கள் திடிரென்று சுற்றி வளைக்கப்பட்டு மாட்டிக்கொள்வேம் என நினைக்கவில்லை. ஆனால் அந்த நிலை திடிரென்று மாறியது. சன்னியாசி ஒருவர் திடீரென்று தோன்றி ஆப்கானீஸ்தர்களை சூலத்தால் தாக்கி விரட்டியடித்தார். பின்னர் அந்த அதிகாரி லெப்டினண்ட் கர்னல் மார்டினிடம் உன் மனைவி எம்மை வேண்டியதாலே இங்குவந்து காப்பாற்றினேன் எனக்கூறி மறைந்தார். நீ யாரிடம் வேண்டினாயோ தெரியவில்லை. ஆனால் அவர் அதி அற்புதமானவர் என்பதில் சந்தேகமில்லை என்பது உண்மை. விரைவில் நான் வெற்றியுடன் திரும்பி வருவேன். என கடிதம் எழுதினார். கணவன் போருக்குச் சென்று பலநாட்களுக்குப் பிறகு போர் என்னவாயிற்றோ என நினைத்து கவலையில் குதிரைமீதேறி நகரில் வலம் வரும்போது அழுகை, கூச்சல் என பலவித ஒலிகளைக் கேட்டுக்கொண்டு வரும்போது வேதங்கள் ஓதும் ஒலிகேட்டு அங்கு சென்று தன் கவலையைப் போக்க ஈசனை வணங்கினாள். வேத விற்பன்னர்கள் ஓம் நமசிவய' என்ற மந்திரம் சொல்லக் கற்பித்தனர். அவள் மனமுருகி அதை சொல்லிக் கொண்டே இருந்தாள். பதினொரு நாட்கள் அவள் தொடர்ந்து அந்த மந்திரத்தை உச்சரித்தாள். பன்னிரண்டாம் நாள் இக்கடிதம் வந்தது. கணவன் திரும்பி வந்ததும் சிவனை சிந்தனையில் இருத்தி வழிபட்டது பற்றிச் சொன்னாள். அந்த நாளில் பதினைந்தாயிரம் ரூபாய் அளித்து கோவிலை பெரிதாக கட்டினார்கள். கல்வெட்டு ஒன்றை பதித்தார்கள். லெப்டினண்ட் கர்னல் மார்டின் பெயராலே அகர்மால்வா தலத்தில் ஈசன்பைஜிநாத்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)