ஊர்:நர்மதா,
பரிக்ரமா-பரிக்ரமா-1,2.
பரிக்ரமா-1.ருத்ர ப்ரகியா- நர்மதையின் தென் கரையில் ஓரிடத்திலிருந்து சங்கமம் வரைசென்று நதியை கடந்து மறுகரை வழியாக புறப்பட்ட இடத்தை அடைதல் (3வருடங்கள், 3மாதங்கள், 13தினங்கள்),
2.ஜில்ஹேரி ப்ரகியா- மா கி பகியா வில் பூஜை முடித்து வடக்கு கரையில் ஆரம்பித்து சங்கமம் சென்று கடலை அடைந்து மீண்டும் அதே வழியில் மா கி பாகியாவை அடைந்து பூஜை முடித்து கரையை மாற்றி தென்கரைவழி சென்று கடலை அடைந்து மீண்டும் மா கி பகியாவில் பூஜை முடித்து பரிக்ராமாவை முடிவு செய்ய வெண்டும் (7 ஆண்டுகள்). நதியை தாண்டாமல் கரையோரம் செல்ல வேண்டும். அப்போது 5நீர்வீழ்ச்சிகள், 25மலைப்பகுதிகள், 3ஜோதிர்லிங்கங்களை தரிசிக்கின்றனர். அவர்கள் நர்மதயின் புத்திரர்கள். 2செட் துணிகள், நர்மதை விநாயகர் பிரதமைகள், லிங்கம், சந்தனம் ஆகிய பேருட்களுடன் பரிக்ரமாவை தொடங்கும் அவர்களுக்கு குறையின்றி வழிமுழுவதும் நர்மதா கவனித்துக் கொள்கிறாள். நர்மதையில் கிடைக்கும் அனைத்து கற்களும் சிவன் எனப்படுகிறது. கோடையில் நீர் அளவு குறைந்துள்ள போது பாண லிங்கங்கள் கிடைக்கின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)