ஊர்: ஓம்காரே மமலேஸ்வரம்# .நர்மதாநதிக்கரை.ஜோ-4/12 ,சிவபுரி, மேற்கு நிமாட்
இறைவன்: 1.ஓம்காரேஸ்வரர்,அமலேஸ்வரர்.2.மகாகாளர், 3.சித்தீஸ்வரர், 4.கேதாரேஷ்வர், 5.குப்தேஷ்வர்
இறைவி:
பிறசன்னதிகள்: பஞ்சமுக கணபதி, சித்தீசுவரர், லட்சுமி நாராயணர், துவாரகாதீரா, ராமேஷ்வர், ஜீவாலேஷ்வர், அந்தகேஷ்வர், நவக்கிரஹனேஷ்வர், ஜுமகேஷ்வர்,
தீர்-கோடி,சக்ர ,நர்மதை நதி, ஓம்காரேஷ்வர் தீர்த்தம்,
தி.நே-0500-0900,1600-2100
#-13-02-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஜோதிர்லிங்கதலம்-4/12. 1000 ஆண்டுகள் பழமை. பிரணவப் பொருளாய் பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் பரமன். அரசன் மந்தாத சிவபக்தனின் வேண்டுகோளுக்கு இணங்க குடி கொண்ட பெருமான்.-ஓங்காரமாந்தாதா. தரிசித்தவர்களுக்கு பூர்வ, புனர் ஜென்ம விஷயங்கள் தெரியவருவதாக சொல்லப்படுகின்றது. நதி ஓம் வடிவில்- பரிக்கிராமாங்கு அமர்ந்து சங்கரர் உப நிஷத்துக்களுக்கு உரை எழுதியதாகவும் அந்த குகை இன்றும் உள்ளது. கர்ப்பகிரகம் ஓங்கார வடிவில் . ஓம்காரேஷ்வர் இரு பிரிவுகள்.1. சிவபுரி-ஓம்காரேஸ்வர், 2.விஷ்ணுபுரி- அமரேஸ்வர்(மாமல்லேஷ்வர்). நர்மதையும் அதன் துணை நதிகாவேரியும் சங்கமாகும் இடம் - ஓம்காரேஷ்வர். இரண்டுமுறை காவேரி நர்மதையைச் சந்தித்து இரண்டு சங்கமங்களுக்கிடையே ஓம் என்ற எழுத்தை ஒத்த வடிவமாக இருப்பதால் ஓம்காரேஷ்வர் என்றானது. நர்மதை காவேரி சங்கம இடத்தில் குபேரன் தவமிருந்து யஷர்களுக்கு அரசனாக இருக்க வரம் பெற்றான்.-குபேர் பண்டாரி. உயரத்தில் இருந்தாலும் கீழே நர்மதையின் நீர் தானே மேலே அந்து அபிஷேகம் ஆகின்றது. ஓம்காரேஷ்வர் கோவிலிருந்து 4 கி,மீ, தூரத்தில் சாத் மாத்ரா- ஸப்த மாத்ருகா- ஏழு தேவிகளின் ஆலயம்- சக்திபீடம்.
இஷ்வாகு வம்சத்து அரசன் யுவனஸ்வாவுக்கு 100 மனைவிகள். அவர்களால் வாரிசு பற்றிய கவலை கொண்டவன் வனம் சென்று முனிவர்களுடன் தெய்வீக காரியங்களில் ஈடுபட நினைத்தவனின் முகத்தைக் கண்டு அவனது சோகத்திற்கு காரணம் தெரிந்த முனிவர்கள் அவனைவைத்து இந்திர தெய்வதா யாகம செய்து அதன் பிரசாதமாக் மந்திர சக்தி நிறைந்த நீரை வைத்திருந்தனர். அரசனின் மனைவிகள் அருந்தினால் அவர்கள் கர்ப்பமாவார்கள். ஆனால் அன்று இரவு தாகம் எடுத்த அரசன் அந்த நீர் பற்றி ஏதும் அறியாததால் எடுத்துக் குடித்துவிட்டான். அதனால் அவன் கருவுற்றான். மந்திரிகள் அறிவுரைப்படி சிசு பிறந்ததும் காட்டில் விட தேவர்கள் அந்த குழந்தையைப் பராமரிக்கின்றனர். இந்திரன் விரல் மூலம் அந்த சிசு அமிர்தம் பருகி வளர்ந்ததால்- மாம்தாதா. -- என்னிடமிருந்து(என்னைப்) பருகும் என இந்திரன் கூறியதாகப் பொருள். யுவனஸ்வா இறந்தபின் மாந்தாதாவுக்கு முடி சூட்டினார்கள். பூவுலகை ஒருகுடைகீழ் தர்ம சீலத்துடன் ஆண்டு வந்தான்.
.
வரை படம்: விரிவாக்கு(enlarge)