ஊர்:வெருள்#ஜோ-12/12
இறைவன்:கிருஷ்னேஸ்வர்.குன்கும்னேஸ்வர்
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-0600-1900
# 25-05-2008- குருஸ்ரீ பகோரா பயணித்தது.
ஜோதிர்லிங்கதலம்-12/12.மனதில் இருக்கும் அஞ்ஞான இருளை ஓட்டுபவர். கீழே தாழ்வாக சிரிய பாணம். மகா சிவராத்திரி சிறப்பு.
எலகங்கா நதிக் கரையில் நாகா பழங்குடியினர் வாழ்ந்த இடம். வருள் மருவி வெருள் ஆனது. வேட்டைக்குச் சென்ர மன்னன் ரிஷிகள் வளர்த்த மிருகங்களை வேட்டையாடினான். ரிஷிகளின் சாபத்தால் அவன் உடம்பு அழுகத் தொடங்கியது. வனத்தில் திரிந்தான். தண்ணீர் தாகம் எடுக்க அங்கிருந்த சுனை நீரைப் பருக அவன் உடம்பில் இருந்த ரோகங்கள் மறைந்தது. மகிழ்வுற்ற மன்னன் கடுமையான தவத்தை காட்டில் மேற்கொண்டான். பிரம்மன் காட்சி தந்து அருள்புரிந்து. பிராஸ்த திர்த்தக் குளம் அமைக்க அதில் புனித நீராடினான். பின்னாளில் அது சிவகுண்டமாகியது.
சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆட்டம் விளையாடிபோது விளையாட்டிற்குத்தானே என்று தவறாக் ஆடியதால் கோபம் கொண்ட சிவன் சஹயாத்ரி மலைத் தொடரில் தியானம் செய்ய ஆரம்பித்தார்.இந்த இடம் மகேஸ்மௌலி பைன்ஸ்மால் என்றழைக்கப்பட்டது.அங்கு சிவனைத் தேடிவந்த பார்வதி காட்டுவாசிப் பெண்ணாக மாறி தவமிருந்து சிவபூஜை செய்து வந்தார். சிவன் காட்சி கொடுக்க இருவரும் சந்தோஷமாக இருந்தனர். இந்த வனம் காம்ய வனம் எனப்பட்டது. பார்வதிக்கு தாகம் ஏற்பட சிவன் தன் சூலாயுதத்தால் நிலத்தைக் கீர அதிலிருந்து நிர்வந்து குளமானது. அதுவே சிவகுண்டம்.
முன் ஜென்மத்தில் பெண்ணாக இருந்த சுதவா வேடனாக வனத்தில் தவமிருந்தான்.சிவனை நோக்கி தவமிருக்க பெருமான் காட்சி எலகங்கா நதியாக ஓட அருள். கம்ய வனத்திலிருந்த புண்ணிய எலகங்கா நதி தன் பயணத்தை தொடர்ந்தது. இங்கு தோன்றியஒளிப்பிளம்பை பார்வதி லிங்கத்தினுள் செலுத்தி வழிபட்டார். பூர்ணலிங்கம்-குன்கும்னேஸ்வரர்.
சுதாமா மனைவி சுவேதா. குழந்தையில்லாததால் வருத்தப்பட்ட சுவேதா உறவினர்களின் பேச்சுக்கு ஆளானார். சுதாமா இதைப் பற்றி கவலைப் படவில்லை. இருப்பினும் சுவேதா தன் தங்கை துஸ்மாவை திருமணம் செய்து வைத்தாள். சகோதரிகள் இருவரும் ஒற்றுமையாக இருந்தனர். ஒரு வருடத்தில் துஸ்மாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. நாள் ஆக ஆக சுவேதா மனதில் பொறாமை தோன்ற துஸ்மாவின் குழந்தையைக் கொன்று ஆற்றில் வீசினாள். குழந்தை காணமல் போனது கண்டு துஸ்மா வருந்தினாள். இருப்பினும் தன் தினசரி கடமையாக செய்துவந்த பூஜைதனை செய்தாள். ஆற்றங்கரையில் லிங்கங்கள் செய்து வழிபட்டாள். சிவன் அருள் புரிய உண்மை தெரிந்தது. சுவேதாவை கொல்லச் சென்ற சுதாமானைத் தடுத்தாள் துஸ்மா.. சிவன் அருள் புரிந்து துஸ்மாவின் மகனை உயிர்பித்தார்.-இறைவன் துஸாமேஷா எனப்பட்டார். ஈஸ்வர குண்டம், தாரா தீர்த்தம். சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)