ஊர்:திரியம்பகேஸ்வர்#ஜோ-10/12 கௌதமிநதிக்கரை.
இறைவன்:ஸ்ரீதிரியம்பகேஸ்வர்
இறைவி:கௌதமி
பிறசன்னதிகள்:
தீர்-கௌதமகங்கா.குஸவர்த்தி.
தி.நே-0600-2100
# 23-05-2008-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
ஜோதிர்லிங்கதலம்-10/12. மூவினையகற்றும். கர்ப்பகிரஹத்தில் மூன்று பானங்கள் ஒன்றாக-பிரம்மா. விஷ்னு, சிவன். சிவன் கோபமடைந்தால் சிங்கம் கர்ஜிப்பது போலவும், தீச்சுடர் வருவது போலவும் தெரியும் போது பாலில் ஓபியம் கலந்து மேலே உள்ள கலசத்திலிருந்து விழச்செய்கின்றனர். பூவுலகில் பஞ்சம் நிலவியபோது கௌதம ரிஷி தவத்தால் ஒரு குழியிலிருந்து முளைத்த பயிர்கள் ஏராளமான தானியங்களைத் தந்தன. அதைக் கொண்டு உயிர்களுக்கு உணவிட்டார். இதையரிந்த பொறாமை கொண்ட முனிவர்கள் ஒர் பசுவை அனுப்ப அது தானியங்களை நாசம் செய்தது. கௌதமர் அதை விரட்ட அது ஓடி ஒர் கிணற்றில் விழுந்து உயிர் விட்டதனால் அந்த தோஷம் கௌதமரைப் பீடிக்க சிவனை நோக்கி தவம். சிவன் தன் சடாமுடியிலிருந்து கங்கையைப்போல் ஓர் நதியை கோதாவரி உருவாக்கி அதில் முனிவரை மூழ்கி எழச் செய்ய அவர் பிரமஹத்தி நீங்கியது. சிவன் அருள்- கௌதமகங்கா.-கௌதமிநதி கோதாவரி கௌதம ரிஷியினால் பூமிக்கு வரவழைக்கப்பட்டது. உற்பத்தியாகு மிடம்- கங்காதுவார்- கோதாவரிமாதா கோவில். நீரில்லாமல் வரட்சி ஏற்படவே கௌதமர் தவம் செய்து வருணனை வரவழைத்து அக்க்ஷய கௌதம தீர்த்தம். பரிக்கிராம பாதையில் ராம் தீர்த், பிராயாக் தீர்த், நரசிம்ஹ தீர்த் உள்ளது.12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா.கோரக்நாத் தவம் செய்த லுகை, கௌதமர் 108 லிங்கங்கள் உள்ள குலை, பரசுராம மந்திரம், குசாவர்த்தனம், கிருஷ்ணன் கோவில், கங்காகோதாவரி ஆலயம், கௌதம ஆசிரமம பார்க்க வேண்டியவை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)