ஊர்: பண்டரிபுரம். சந்திரபாகா நதிக்கரை. புண்டரிகபுரம்
மூலவர்:
இறைவன்: பாண்டுரங்கன் - ருக்மணி
இறைவி: ருக்மணி
உற்சவர்:
பிறசன்னதிகள்: மகாகணபதி, தத்தாத்ரேயர்.நரசிம்மர், ராதா, கிருஷ்ணர், கருட பீடம் -புரந்தரதாசர் பீடம். சத்யபாமாவிற்கும் ராதைக்கும் தனிச்சன்னதி
மரம்: தெராட்டி
தீர்: பீமா நதி
தி.நே-0430-1200,1630-2030
தலபுராணம்-ஜானுதேவர் - சத்யவதி தம்பதியினரின் மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மதிப்பும் மரியாதையும் மிக்கவனாக இருந்தவன் திருமணத்திற்குப்பின் முற்றிலும் மாறி தாய் தந்தையரை கேவலமாக நடத்தினான். மனம் நொந்த பெற்றோர் காசி யாத்திரை சென்றனர். புண்டரீகன் மனைவி நாமும் போகலாம் என அடம் பிடித்தாள். வழியெங்கும் புண்டரீகன் தன் தாய் தந்தைய்ரை அவமானப் படுத்தி வந்தான். தாய் தந்தையர் நடந்துவர புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரைமீது பயணித்து வந்தனர். வழியில் குக்குட முனிவர் ஆசிரமத்தில் ஓய்வெடுத்தனர், விடியற் காலையில் அந்த ஆசிரமத்திற்குள் அழுக்கான ஆடைகளுடன் சில பெண்கள் சென்று மீண்டும் திரும்பிவரும்போது நல்ல தூய ஆடைகளுடன் வந்தனர். அடுத்தநாளும் அதே போல் அப்பெண்கள் உள்ளே செல்ல அவர்கள் திரும்பி வரும்போது தயாராக காத்திருந்து அப்பெண்களை நோக்கி நீங்கள் யார் என்று கேட்டான் புண்டரீகன். அப்பெண்கள் நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிகள். மக்கள் தங்கள் பாவங்களை நீராடி எங்களிடம் போக்கிவிட்டு தூய்மை அடைகின்றனர். நாங்கள் எங்கள் மேலே ஏற்பட்ட பாவத்தை தாய் தந்தையரை தெய்வமாக போற்றும் இக் குக்குட முனிவருக்கு சேவை செய்து மீண்டும் தூய்மையடைந்து திரும்புகின்றொம் என்றனர். அக்கணமே புண்டரீகன் மனம் திருந்தி தாய் தந்தையரை போற்றி வணங்க ஆரம்பித்தான்.
புண்டரீகனை அகிலத்திற்கு அடையாளம் காட்ட நினைத்தார் கிருஷ்ணர் ராதையை கொஞ்சிக் கொண்டிருப்பதை பார்த்த ருக்மணி கோபங்கொண்டு வனத்திற்குச் செல்ல அவளை சமாதானப் படுத்தி கூட்டி வரும்போது பெற்றோருக்குச் சேவைசெய்யும் மைந்தனை காட்ட நினைத்து புண்டரீகன் வீட்டு வாசலில் நின்று தண்ணீர் கேட்டார். அப்போது மழை பெய்து கொண்டிருக்க ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டு சாற்று நேரம் அதன் மேல் நில்லுங்கள் .நான் பெற்றோருக்குச் சேவை செய்து முடித்துவிட்டு வருகின்றேன் என்றான் புண்டரீகன். ட்ன் சேவையை முடித்துக் கொண்டு வந்தவர்களை வரவேற்றான் [உண்டரீகன். அதற்கு மேலும் பொறுமை காட்டாத ருக்மணி வந்திருப்பது கிருஷ்ணர் என கூரினாள். கிருஷ்ணர் புன்னகைப் புரிந்தார். உண்மை அரிந்த புண்டரீகன் பதறினான், மன்னில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான்/. உன் மாதா பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன் வேண்டும் வரம்கேள் என்றார். பண்டுரங்கனே நீ விட்டலனாக சந்நித்தியம் இங்கே கொள்ள வேண்டும் என்றான் பணிவுடன். சந்திரபிரபா நதியில் நீராடி என்னை தரிசிப்பவர்களுக்கு மங்களம் உண்டாகும் என அருள் புரிந்தார் கிருஷ்ணன். கிழக்குவாயில் நாமதேவ் வாயில்.
புரந்தர தாசர் ஒருமுறை பாண்டுரங்கனை தரிசிப்பதற்கு இங்கு வந்தார். தன் சீடன் அப்பண்னாவுடன் ஒரு சத்திரத்தில் தங்கினார். நெடுந்தூரம் பயணித்ததால் கால்வலி யால் நடிநிசியில் விழிப்புவர அப்பண்ணா ஒத்தடம் கொடுக்க வெந்நீர் கொண்டுவா என்றார், அப்பண்ணா ஒரு பாத்திரத்தில் சுடச் சுட வெந்நீர் தாமதமாக கொண்டுவர அந்த வெந்நீரை அப்பண்னா முகத்தின் மேல் கோபத்தால் ஊற்றிவிட்டார். பின் தன் செயலுக்கு வருந்தி காலை நேரத்தில் அப்பண்ணாவிடம் சென்று தான் இரவு அப்படி நடந்ததற்கு வருத்தம் தெரிவிக்க ,அப்பண்ணா ஆச்சரியமடைந்து நான் உங்களுக்கு வெந்நீர் கொண்டு வரவில்லை என்றான். ஒன்றும் புரியாமல் நீராடிவிட்டு பாண்டுரங்கனை தரிசிக்க சென்றால் அங்கு கொதிக்கும் நீரை முகத்தில் ஊற்றினாற்போல் பாண்டுரங்கன் முகத்தில் கொப்புளங்கள் இருக்கக்கண்டு அனைவரும் பரபரப்புடன் பேசிக்கொண்டிருந்தனர்.. நீ என்று அறியாமல் நான் செய்த பிழையை மன்னிக்க வேண்டினார். என் கோபம் போக்க நீ நடத்திய நாடகமா இது என்றார். மீண்டும் உன் அழகிய திருமுகத்தை நான் காண வேண்டும் என வேண்ட பாண்டுரங்கன் முகம் அழகிய முகமாக மாறியது. புரந்தரதாசர் கருட பீடத்தின்மீது அமர்ந்து பாடல்கள் பாடி மகிழ்ந்தார்.
கிருஷ்ண தேவராயர் ஒருசமயம் விட்டலின் அழகில் மயங்கி அச்சிலையை தன்னுடைய இடத்தில் பிரதிஷ்டை செய்தார். ஆனால் தினமும் இக்கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர் பானுதாசர் விட்டல் இல்லாதது கண்டு ஆடிப்போய் கடும் முயற்சி செய்து கண்டு பிடித்து அங்கே விட்டலைக் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தினார். அப்போது தான் அணிந்திருந்த வைரமாலையை அவருக்கு போட்டு மகிழ்ந்தார் விட்டல். மாலை பானுதாசர் கழுத்தில் இருக்க காவலர்கள் அரசனிடம் தெரிவிக்க சூலத்தில் ஏற்ற ஆணை. அப்போது சூலம் ஒரு துளசி செடியாக மாற தன் தவறை உணர்ந்த மன்னன் பானுதாசரோடு விட்டலையும் மீண்டும் பண்டரி புரத்திற்கே அனுப்பிவைத்தார். ஆஷாட ஏகாதசி அன்று இத வைபமே இங்கு சிறப்பு.
மண்டப தூண்களில் மகாபாரதக் காட்சிகள்.. பக்தர் துக்காராமின் பாதுகைகள் பிரதிஷ்டை இடுப்பில் கையை ஊன்றியவாரு ஒரு செங்கல்லின்மேல் நின்று அருள் பாலிக்கும் பண்டரிநாதன் மணற்கல்லால் ஆன சுயம்பு மூர்த்தி. விட்-செங்கல்-விட்டலன்.மூலவரின் திருவடிகளில் தலையை வைத்து வழிபாடு-பாதஸ்பரிச தரிசனம். கானோபாத்ரா என்ற பெண் பக்தையே இங்கு தல விருட்சமாக மாறி தெராட்டி என்ற பெயரில் இருக்கின்றாள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)