ஊர்:சூரியணார்கோயில்#நவ-1/9
மூலவர்: ஸ்ரீசிவசூரியநாராயணசுவாமிபெருமான்-உஷா,சாயாதேவி(பிரதியுஷா)
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி
பிறசன்னதிகள்: ஸ்ரீகுரு, ஸ்ரீசனி, ஸ்ரீபுதன், ஸ்ரீசெவ்வாய், ஸ்ரீசந்திரன், ஸ்ரீகேது, ஸ்ரீசுக்கிரன், ஸ்ரீராகு
த.வி. ஸ்ரீகோள்தீர்த்தவிநாயகர்.
3நிலைராஜகோபுரம்-.
தீர்-சூரியபுஷ்கரணி.
மரம்-வெள்ளெருக்கு.
தி.நே-0600-1230,1600-2000
#02102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)
தொலைபேசி-0435-2472349
ஆன்மா, எழும்பு, தந்தை நலன் பெற சூரிய வழிபாடு. இரண்டு கரங்களில் தாமரை மலரை ஏந்தி மேற்கு முகமாக உஷாதேவி மற்றும் சாயாதேவி (பிரதியுஷா) உடன் நிற்கும் உக்கிரம் மிகுந்த சூரியனின் வெம்மையை தனித்து அவரை சாந்தப்படுத்த சூரியனின் நேரெதிரே குரு -சிறப்பு.
சூரியன் நவக்கிரகத்தலம்-1/9 (ஞாயிறு கிழமை தோஷபரிகாரம்-சகல காரிய சித்தி, லோக ஆகர்ஷ்ணம்.)
9நவக்கிரகங்களுக்கும் அந்தந்த திசையில் தனித்தனி சன்னதி வாகனங்களும், ஆயுதங்களுமின்றி- சிறப்பு, மற்ற தலங்களில் பரிவாரமாக. இங்கு ஏகாந்தமாக சனி-ஏகாந்தசனி. நவகிரகங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றதலம்,
திருவிடை மருதூர் பரிவாரத் தலம்- நவக்கிரகம்-4/9. கண், இருதயம் சம்பந்தப்பட நோய்கள் நீங்க, உடல் ஆரோக்கியம், நிம்மதிக்கு சூரிய வழிபாடு.
வரலாறு: காலவ முனிவருக்கு ஏற்பட்ட தொழுநோய் நீங்க நவகிரகங்களை வழிபட நவகிரகங்கள் அவருக்கு அருள் செய்ய இது தெரிந்த பிரம்மன், சிவபெருமான் ஆணைப்படி எல்ல உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலன்களை மட்டுமே நவகிரகங்கள் கொடுக்க வேண்டும் என்று அனுமதித்திருந்தும் அதை மீறி வரம் தந்தது தவறு. என்வே நீங்கள் தொழு நோயால் பீடித்து பூவுலகில் உழல சாபமிட்டார். சாபம் நீங்க வெள்ளெருக்கங் காட்டில் கடும் தவமிருந்து மும்மூர்த்திகள் அருள் பெற்று சாபம் நிங்கியது. சிவபெருமான் இங்கு ஒன்பது நீர் நிலைகளை உருவாக்கி அந்நீர் நிலைகளில் நீராடி வழிபடுவோருக்கு மட்டுமே நவகிரகங்களில் அருள் கிட்டும் என அருளினார்.
வழிபடும் முறை: சூரிய புஷ்கரணியில் நீராடி அல்லது தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு கோபுர தரிசனம் முடிந்து முதலில் கோள் தீர்த்த விநாயகர். பின் காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி. பின் கருவரை சிவசூர்யநாராயனர்- உஷா, பரத்யுஷா ஆகியோரை தரிசித்து அவர்முன் இருக்கும் குருவை தரிசிக்க வேண்டும். பின் சனி, புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு அகியோரை தரிசித்து மீண்டும் கோள் தீர்த்த விநாயகரைத் தரிசிக்க வேண்டும். கொடி மரத்தை வணங்கி பிரஹாரத்தைச் சுற்றி வரவேண்டும். பீடத்தின்முன் ஆடவர்கள் அஷ்டாங்கமாகவும், மகளிர் பஞ்சாங்கமாகவும் வடக்கு பக்கம் தலைவைத்து வணங்க வேண்டும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
