ஊர்:சேரன்மாதேவி.#
மூலவர்:
இறைவன்:1.ஸ்ரீஅம்மைநாதர்(சு)2.ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி:1.ஸ்ரீஆவுடைநாயகி.2.ஸ்ரீவிசாலாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீநடராஜர்-சிவகாமி
3நிலை ராஜகோபுரம் தீர்-யாச
மரம்-ஆல் தி.நே.0900-1000,1600-1700
#-29-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-பட்டர்-96597 26511, 94422 26511
உரோமசமுனி நித்தியத்துவம் வேண்டி பிரதிஷ்டை செய்து வழிபாடு. ரணவிமோசனப் பாறை-41 நாள் நீராடினால் நோய் தீரும்.நவகைலாயம்-2/9. சந்திரன் பரிகாரத் தலம். அத்ரி-அனுசூயாவின் மகன்-சந்திரன் தோஷமுள்ளவர்கள் வழி பட்டால் துன்பம் நீங்கி இன்பம் கிட்டும். 16கலைகளுடன் உலகை வசப்படுத்துபவன். உயிர்களுக்கு இன்பத்தை வழங்குபவன். புத்தி சுவாதீனம், மன அழுத்தம், சஞ்சலம் நீங்க வழிபாடு.
முக்தி வேண்டி குரோம ரிஷி வழிகேட்க தாமரபரணியில் நீராடி வழிபட மலர்கள் வழிகாட்ட பின்தொடர்ந்து கரை சேர்ந்த ஒன்பது இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு. 1.பாவவிநாசி-சூரியன் ஆட்சி, 2.சேரன்மாகாதேவி- சந்திரன் ஆட்சி, 3.கோடக நல்லூர்- செவ்வாய் ஆட்சி- மூன்றும் மேல் கைலாயம். 4.குன்னத்தூர்- ராகு ஆட்சி, 5.முரப்பநாடு- குரு ஆட்சி, 6.ஸ்ரீவைகுண்டம்- சனி ஆட்சி- மூன்றும் நடுகைலாயம், 6.தென்திருப்பேறை- புதன் ஆட்சி, 8.இராஜபதி- கேது ஆட்சி, 9.சேர்ந்தபூமங்களம்- சுக்ரன் ஆட்சி மூன்றும் கீழ்கைலாயம் என்றாகியது.
இரண்டு ஏழைச் சகோதரிகள் நெற்குத்தும் தொழிலில் பணம் சம்பாதித்து கோவில் கட்ட எண்ணினர். பணம் போதவில்லை. சிவநாமம் உச்சரித்து தொழில் செய்து வந்தனர். இறையின் அனுக்கிரகம் கிட்டியது. சிவன் அந்தனர் உருவத்தில்வர அவருக்கு விருந்து அளித்தனர் அந்த சகோதரிகள். அன்றிலிருந்து அவர்களுக்குச் செல்வம் கொளித்தது. அதை வைத்து கோவில் கட்டினர். பிற்காலத்தில் இராஜராஜசோழன், இராஜேந்திரச் சோழன், திருப்பணி. மாதேவி என்பது சேரன்மகளின் பெயர். இவ்வூருக்கு தன் மகளின் பெயரைச் சூட்ட- சேரன்மாகாதேவி. இரணவிநாசம்பாறையில் 41 நாட்கள் நீராடல் உடல் நலம்.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாம்ரபரணி மஹா புஷ்கரம் நிகழ்வு-புரட்டாசி 25-ம்நாள் வியாழன் 11/10/2018 தொடங்கி ஐப்பசி 5-ம்நாள் திங்கள் 22-10-2018 வரை. புனிதநீராடலில் பங்கேற்று வளமுடன் வாழ்க என வாழ்த்தும்-குருஸ்ரீ
வரை படம்: விரிவாக்கு(enlarge)
