ஊர்:பெரும்பற்றப்புலியூர்#தி.த-55+மு.சிதம்பரம்.கோயில்.தில்லை.ஞானகாசம், புண்டரீகபுரம்,பூலோககைலாயம்,சிதாகாசத்தலம்.:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநடராசர், ஸ்ரீஅம்பலக்கூத்தர், ஸ்ரீதிருச்சிற்றம்பலமுடையார், ஸ்ரீஅம்பலவாணர், ஸ்ரீகூத்தபிரன், ஸ்ரீகனகசபாபதி, ஸ்ரீசபாநாயகர்
இறைவி: ஸ்ரீசிவகாமி,ஸ்ரீசிவகாமசுந்தரி.ஸ்ரீஇளமையாக்கினார்
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீஸ்படிகலிங்கம். ஸ்ரீகோவிந்தராஜன். ஸ்ரீமுத்துக்குமாரர், ஸ்ரீகார்த்திகேயர்-ஒருமுகம்-4கரங்கள். ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள்-வள்ளி, தெய்வானையுடன், 'திருவம்பலச்சக்கரம்'-எனும்'சிதாகாசசக்கரம்'
4புறமும்கோபுரம்-7நி.-135அடி. தெ.ராஜகோபுரம்
மரம்-தில்லை, ஆல்.
தீர்-சிவகங்கை, பரமானந்தகூபம், பிரம, வியாக்ரபாதர், அனந்த, நாகசேரி, சிவபிரியை, புலிமடு, குய்ய, திருபாற்கடல்- 10தீர்த்தங்கள்
தேர்த்திருவிழா தி.நே-0600-1200,1600-2000
#02102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
ஐம்புலியூர்-1/5.சித்+அம்பரம்-அறிவு-வெட்டவெளி அர்த்தசாம வழி பாட்டுக்குப்பின் எல்லா கோயில் களிலுள்ள சிவ கலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதால்-திருமூலட்டானம்-அர்த்தச்சாமவழிபாடு சிறப்பு பஞ்சபூத ஆகாயத் தலம்-1/5. பஞ்ச சபைகளில் கனகசபை, பொற்சபை. தரிசிக்க முக்தி தலம். 1.சிற்றம்பலம்-நடராசர் நடம்புரிந்த இடம்.நடராசர் வலப்புறம் ரஹஸ்யம் பெருவெளி. 2.பொன்னம் பலம்-கனகசபை-நடராசர் அபிஷேகம் 3.பேரம் பலம்-பஞ்சமூர்திகள் எழுந்தருளிய தேவ சபை. 4.நிருத்தசபை-ஊர்த்துவ தாண்டவம் அருளியது. 5.இராசசபை-1000கால் முடிசூட்டு விழா மண்டபம். இடப்பால் திருசித்திரக் கூடம். இறைவன்- திருவாரூர்- மூலாதாரம், திருவானைக்கா- உந்தி, திருவண்ணாமலை- மணிபூரம், திருக்காளத்தி- கழுத்து, காசி- புருமத்தி, சிதம்பரம்- இருதய ஸ்தானம் ஆக சொல்லப் படும்.ஒரு நிமிடத்திற்கு 15முறை என ஒருநாளில் 21600 முறை மூச்சு விடுவதால் பிரபஞ்சத்தின் உயிர்மூச்சு இறைவன் என்பதை குறிக்க-21600 பொன்னோடுகள். மூச்சு பாதையில் ஆதார நாடிகள் 72000 என்பதை குறிக்க 72000 ஆணிகள். மனித இருதயம் இடது பக்கம் இருப்பது போன்று கருவரை. இரத்த குழாய்கள் பக்கவாட்டில் இருப்பது போன்று கோவிலில் பக்கவாட்டில் வழி. 64கைம் மரங்கள்- 64கலைகள், நவசக்திகள்- 9கலசங்கள், 96பலகணி- 96தத்துவங்கள், 4தங்கதூண்கள்- 4வேதங்கள். 28கம்பங்கள்- 28ஆகமங்கள். ஆனி- உத்திரம், மார்கழி பிரமோற்சவம். ஆருத்ரா தரிசனம் சிறப்பு. 10/63-திருநீலகண்ட நாயனார். 11/63-கனம்புல் நாயனார். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(129-137)- பெற்ற தலம்.ஆதிசங்கரர் கயிலைநாதரிடம் பெற்ற பஞ்ச லிங்கங்களில்- மோட்சலிங்கம் இங்கு ஸ்தாபித்தார்.
சிதம்பர ரகசியம்: சிற்சபையில்வலது பக்கத்தில் ஓர்சிறிய அறை. திரை அகற்றப்படும்போது தங்கத்திலான வில்வ மாலை ஒன்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டப்படும். இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதாகும்.
நடராஜருக்கு வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம். 1.சித்திரை- திருவோண நடசத்திரம்- உச்சிக்காலம், 2.ஆனி- உத்திரம்- பிரதோஷகாலம்- ஆனித்திருமஞ்ஞனம், 3.ஆவணி மாதம் - ச்துர்த்தசி திதி- சாயரட்சைகாலபூஜை, 4.புரட்டாசி- வளர்பிறை சதுர்தசி-அர்த்த ஜாமம், 5.மார்கழி- திருவாதிஅரை நட்சத்திரம் நள்ளிரவு, 6.மாசிமாதம் சதுர்த்தசி திதி காலசந்தியில்
சித் ஆகாச சேத்திரம். ஞானம் தருவதும் ஆகாயம்போல் எங்கும் நிறைந்ததுமான இறைவன் இருக்கும் இடம் என்பதால் சித் ஆகாசம் ஆகி அதுவே சித் அம்பரமாகி சிதம்பரமானது. முன்பு கோவிலுக்குமட்டுமே சிதம்பரம் என்றிருந்து இன்று ஊரே சிதம்பரம் ஆயிற்று. தில்லைத் திருக்கோயிலில் உள்ள நான்கு கோபுர வாயில்களிலும் நால்வர் திருவடி பதிந்துள்ளது. கிழக்கில் மணிவாசகரும், மேற்கில் அப்பரும், தெற்கில் ஞானசமபந்தரும், வடக்கில் சுந்தரரும் எழுந்தருளியுள்ளனர்.
எட்டுத்திசைகளிலும் மகா சாஸ்தா, பால சாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, ஜகன்மோகன் சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, ருத்ர சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, என சாஸ்தாவின் அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஆருத்திரா த்ரிசனத்தன்று நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் நைவேத்தியம் வைத்து தீபாராதனை செய்தல்-திருவனந்தல் எனப்படும். ஆதிசங்கரர் அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை. சேக்கிழார் 1000 கால் மண்டபத்தில் பெரிய புராணத்தை அரங்கேற்றினார். உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் சிவகணங்களும் அர்த்த ஜாம பூஜையில் கலந்து கொள்வதாக ஐதீகம். இத்தல முருகனை அருணகிரிநாதர் - திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் சிலையின் கீழ் இரத்தினசபாபதி திருமேனிக்கு காலை 1000-1100 பூஜை. இச்சிலைக்கு பின்னால் தீபாராதனை காட்டும் போது முன்புறமும், பிரகாசமான ஒளியை தரிசிக்கலாம்.
நடராஜர் நடனம்புரியும் பொன்னம்பலத்திற்கும் மனித உடலமைப்பிற்கும் உள்ள பொருத்தங்கள் நிறைய. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட 21600 தங்கத் தகடுகள் வேயப்பட்டுள்ளன.-இது ஒரு மனிதன் சராசரியாய் சுவாசிக்கும் எண்ணிக்கையாகும். இங்கு அடிக்கப்பட்டுள்ள ஆணிகள் 72000- இது மனிதனின் நாடி நரம்புகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். கோவிலில் உள்ள நவ வாசல்கள் மனித உடலில் உள்ள ஒன்பது துவாரங்களைக் குறிக்கும், சிவயநம என்ற பஞ்சாக்கரத்தின் அடிப்படையில் படிகள் ஐந்து. சாத்துமரங்கள்-64 ம் அறுபத்து நான்கு கலைகளையும், ஜன்னல்கள் 96- தொன்னூற்று ஆறு தத்துவங்களையும், வேதங்கள் நான்கு, சாஸ்திரங்கள் ஆறு என்ற அடிப்படையில் கோவில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு ராஜகோபுரங்களும் ஒரே மாதிரியாக ஏழு நிலைகளுடன் 135 அடி உயரமும் செப்பு கலசங்களும் கொண்டது. வாசல் உயரம் 40 அடி. இருபுறமும் பரதக்கலைச் சிற்பங்கள். திருவடைச்சான் என்ற கோபுர வடிவிலான ரதத்தில் இறைவனும் இறைவியும் திருத்தேர் உலா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)