ஊர்:கைச்சினம்.கச்சினம். தித-239+அ-83+மு. கோங்குவனம். கர்ணிகாரவனம்.:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைச்சினேஸ்வரர், ஸ்ரீகரச்சினேஸ்வரர், ஸ்ரீகோங்கிலவுவனநாதேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசுவேதவளைநாயகி, ஸ்ரீவெள்வளைநாயகி
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீரிஷபாரூடஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீமுருகன்-ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானையுடன்-ஸ்ரீபெருமாள்-சங்குசக்ரபாணியாக-7'
+3நிலைராஜகோபுரம்
2பிரகாரங்கள்
மாடக்கோயில்: தீர்-வச்சிர,இந்திர,அகத்திய.
மரம்-கோங்கிலவு,வன்னி
5காலபூஜைகள்.
தி.நே-0730-12,16-20
#07.05.2022-குருஸ்ரீ பகோரா பயனித்தது
திருணபிந்துமுனி, இந்திரன், அகத்தியர், விதூமன் வழிபட்டது.
பூலோகத்தை சுற்றி வரும்போது அகலிகையைக் கண்டு அகலிகைமீது கொண்ட ஆசையின் காரணமாக காகம் போல் உருக்கொண்டு ஒலி எழுப்ப,எழுந்த முனி தன்பர்ம்மகால பூஜைக்கு காலதாமதம் ஆகிவிட்டது என்று நினைந்து விரைவாக நதிக்கரியில் நீராடி நீரு பூசி சிவமணி தரித்து கீழ்வானம் நோக்கியபோது வானில் வைகறைபோதின் அடையாளங்கள் இல்லை, சுக்கிர மீன் காணவில்லை, வைகறைக்கேற்ற வெளிச்சமும் இல்லை. நடந்தது என்ன வென்று தன் ஞானக்கண்ணால் நோக்க அங்கே தன் மனைவியுடன் இந்திரன் சல்லாபம் செய்து கொண்டிருப்பது கண்டு ஆசிரமம் விரந்தார். கலவி முடிந்து இந்திரன் வெளிவர கௌதம மகரிஷி மோகத்தல் மதியிழந்த இந்திரனை காகம் போல் கரைந்து உனது அங்கங்கள் அழுகிபோகும் மேலும் நீ ஒரு யோனிக்கு அவாவுற்றதால் நின் திருமேன் இயெங்கும் ஓராயிரம் யோனிகள் நிறைந்து போகட்டும் என சாபமிட அந்தச்சாபத்திற்கு ஆளான இந்திரன் திருவாரூருக்குப் பின் இங்கு மணலால் லிங்கம்செய்து ஐந்து திங்கள் பூஜை முடித்து அதை எடுத்து வைக்க முயலும்போது பூமியில் பற்றிக்கொள்ள சுவாமிமீது கைபட்ட அடையாளம்-கைச்சின்னம். பொன்னார் மேனியர் காட்சி கிடைக்க இந்திரன் அங்கத்திலிருந்த யோனிகள் மறைந்து அவை கண்களாக மாறின. இந்திரன் ஆயிரம் கண்ணோன் என அழைக்கப்பட்டான். சிலகாலம் இங்கு தங்கி அம்மையப்பரை வணங்கி தன் வெள்ளையானையின் தந்தத்தால் அம்மைக்கு வளை செய்வித்து அனிந்து மகிழ்ந்து வழிபட்டு தேவலோகம் சென்றான்.
இறைவன் பார்வதி திருமணம் நடக்க எல்லோரும் ஒன்று கூடியதால் வடநிலம் தாழ ஈசன் அதை சமநிலைப்படுத்த அகத்தியரை தென் நிலத்திற்கு அணுப்பினார். வரும் வழியில் விந்தியமலையின் கர்வத்தை அடக்கிவிட்டு வரும்போது வில்லவன், வாதாபி என்ற அரக்கர்கள் அகத்தியரை கொல்ல மாறுவேடமிட்டு வர அதை உணர்ந்த அகத்தியர் வில்லவனையும், வாதபியையும் கொண்றுவிட அந்த பிரகத்தி தோசம் தன்னை பின் தொடர்வதை அறிந்த அகத்தியர் கோங்குவனமாகிய கைச்சினத்தை அடைந்து தீர்த்தக் குளம் உண்டாக்கி ஈசனை வழிபட்டு பிரமகத்தி தோஷம் நீங்கப் பெற்றார்.
அட்ட வசுக்களில் ஒருவனான விதுமன் சத்திய லோகத்தில் நடனமாடிய அலம்புசை என்ற பெண்ணை சேர ஆசைகொண்டான். தன்மேல் விதுமன் ஆசைகொண்டதை அறிந்த அலம்புசைக்கு தன் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாமல் நடனத்தில் தவறு ஏற்பட இதை அறிந்த பிரம்மன் இருவரையும் பூ உலகத்தில் பிறக்க சாபமிட்டான். பூவுலகில் ஒரு மகவு பிறந்ததும் கோங்குவனத்தில் இருக்கும் ஈசனை வழிபட்டால் சாபம் நீங்க அருள் செய்தான் பிரம்மன். அர்ச்சுனன்பேரனும் பரீஷித்தின் மகனுமான ஜனமேஜயனின் மகன் சதாநீகனின் மகவாக விதூமன் பிறக்க சகஸ்ராநீகன் என பெயரிட்டு வளர்ந்து வந்தான். அலம்புசை கிருதவர்மன் என்ற அயோத்தி மன்னனுக்கு மிருகாவதி என்ற பெயரில் பிறந்து வளர்ந்து வந்தாள். தேவர் அசுரர் போரில் சதாநீகன் இந்திரனுக்கு துணையாக நின்று போரிட்டு வெற்றியை அடைய உதவினன். அப்போது அயோத்திக்குச் செல்ல சகஸ்ராநீகனுக்கும் மிருகாவதிக்கும் திருமணம் நடந்தது. மிருகாவதி கர்ப்பமடைந்து உதயணன் என்ற மகவை பெற்றாள். மகன் வளர்ந்து பெரியவனானதும் அவனுக்கு ராச்சிய பொருப்பை ஒப்படைக்க தன் பூர்வீகம் நினைவிற்கு வந்து கோங்குவனமாகிய கைச்சினம் வந்து ஈசனை வழிபட்டு தன் சாபம் நிவர்த்தியடைந்தான்.
இந்திரன் சாபம், அகத்தியர் பிரமகத்தி விலகிய தலம். வைகாசி-விசாகம் பெருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். திருப்புகழ் வைப்புதலம்.அருணகிரியார் திருப்புகழ் மாலை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)