ஊர்:சாட்டியக்குடி , ஏழிருக்கை, வேதபுரி, வன்னிவனம், சாத்தியக்குடி, குபேரபுரி:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவேதபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீவேதநாயகி -நான்கு கரங்கள் நின்ற கோலம்.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர். ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீநடராஜர், ஸ்ரீசனிபகவான், ஸ்ரீபைரவர், ஸ்ரீசாண்டில்யமுனி, ஸ்ரீகருவூர்த்தேவர், ஸ்ரீகுபேரன், ஸ்ரீசூரியன்.
மரம்-வன்னி தீர்-கொன்றை, வேத ஐந்துகாலபூஜைகள் தி.நே - 0800-1200, 1600-1930
சாட்டியம்- வெப்பம்.- சாட்டியக்குடி. வெப்பு நோய்களை மருந்தீசனாகி சிவபெருமான் குணப்படுத்தியதால், வெப்ப நோய்க்குரிய ஜூரதேவதை அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு இங்கு வழிபட, உயிர்களின் பாவ புண்ணியப்படி பீடிக்கவும் இங்கு வந்து வழிபடுவோரை வாட்டாமல் விலகுமாறும் அருள். சாண்டில்ய மகரிஷியின் வெப்பு நோய் தீர்த்த தலம்.
சிவபெருமானைத் தரிசிக்க சென்ற குபேரன் பார்வதியின் அழகில் மயங்க கோபம் கொண்ட பார்வதி அருவருப்பன உருவத்துடன் அனைத்து நிதிகளையும் இழக்க சாபம். திருக்கோளூர் சென்று வைத்தமாநிதிப் பெருமாளை வணங்கி அவரிடம் தஞ்சமடைந்திருந்த நவநிதியங்களில் ஒருபகுதியைப் பெற்று மீதமுள்ள செல்வங்களைப் பெற குபேரன் இங்கு வந்து பூஜை- குபேரபுரி.சிவன் சன்னதி பின்புறம் குபேரன் அமர்ந்து வழிபடுவதாக ஐதீகம்.
கருவூர்த்தேவர் சூட்சம ஆசனங்களாக அனந்தாசனம், பத்மாசனம், சிம்மாசனம், யோகாசனம், விமலாசனம், விமலாசன ஊர்த்துவம் ஆகிய ஆறு ஆசனங்களும் உள்ளடக்கி சதுர ஆவுடையார் அமைத்து அத்துடன் ஏழாவதாக ஆவுடையாரும் சேர்த்து ஏழு ஆசனங்களில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் ஏழு இருக்கை- ஏழிருக்கை.
இறைவன் வேதவடிவானவன்- அவன் உறையும் ஊர்- வேதபுரி. வன்னி வனத்தில் சுயம்புவாய் தோன்றியதால் வன்னிவனம். மாசிமகம் ஏக தின பிரமோற்சவம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)