ஊர்:காரைக்கால் #
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசோமநாதஸ்வமி
இறைவி: ஸ்ரீசோமநாயகி தாயார் :
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகாரைக்காலம்மையார்.,ஸ்ரீ விநாயகர், ஸ்ரீஆடிப்பூர அம்மன், ஸ்ரீபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன்.
மரம்:
தீர்:
தி.நே-0600-1200,1700-2000
# 23-10-2018-குருஸ்ரீ பயணித்தது
நீதிபதி மகன் பரமனுக்கும்- தினதத்தன் மகள் புனிதவதிக்கும் திருமணம் நடந்தது. புனிதவதி சிவபக்தை. வீட்டிற்கு வந்த அடியார்க்கு உணவு படைத்து மகிழ்வார். பரமன் மதியம் உண்ணலாம் எனக் கொடுத்த 2கனியில் ஒன்றை சிவனடியார்க்கு கொடுத்தார். கணவனுக்கு ஒன்றைக் கொடுத்தார். கனி சுவையாயிருக்க இன்னொன்று எங்கே எனக்கேட்க, கணவன் கேட்கும்போது கொடுக்கமுடியாமல் போய்விட்டதே என்று வருந்திய புனிதவதி இறைவனிடம் வேண்டி இன்னொரு கனியை பெற்று பரமனிடம் கொடுக்க இக்கனி நான்கொடுத்தது அல்ல இதன் சுவை மிகமிக அதிகம் எனக்கூற புனிதவதி நடந்ததைகூற அதை நம்பாதவன் நீ சொல்வது உண்மையானால் இறைவனிடம் வேண்டி இன்னுமொரு கனியை பெறுக என்றான். அவ்வண்ணமே இறைவனிடம் கேட்டு இன்னொரு கனியைப் பெற்று கணவனிடம் கொடுக்க பரமன் நீ மானிடப்பெண் அல்ல என்று கையெடுத்து கும்பிட்டான். வியாபாரம் செய்ய வேறு ஊர் சென்றவன் அங்கேயே ஒரு பெண்ணை மணம் புரிந்து ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானான். அந்தக் குழந்தைக்கு புனிதவதி என்றே பெயர் சூட்டினான். இதை அறிந்த புனிதவதி அந்த ஊருக்குவர தன் மனைவி குழந்தைகளுடன் அவள் காலில் விழுந்து வணங்கினான். கணவனின் மனதைப் புரிந்துகொண்ட புனிதவதி அவனுக்குச் சொந்தமான இந்த உடம்பு இனி அவனுக்குத் தேவையில்லையாதலால் இறைவனிடம் தன் அழகு மறைந்து பேய் உருக்கேட்டு வேண்ட அருள். திருக்கயிலையை காலால் மிதிக்கக்கூடாது என தலையால் நடந்து சந்நிதி அடைந்தார். இந்தக் கோலத்தில் வரும் இந்தபெண் யார் என்று கேட்ட உமையிடம் உனக்கும் எனக்கும் அம்மை என்றார். அம்மா.. உனக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்ட சிவனிடம் மீண்டும் பிறவாமை வேண்டும் மீறிப் பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும். நடனம் புரியும்போது உன் அடிக்கீழ் இருக்க வரம் வேண்டும் என்றார். தலையால் நடந்தே திருவாலங்காட்டினை அடைந்து சிவனின் திரு ஆனந்த நடனத்தைக் கண்டு களித்து திருவாலங்காட்டுத் திருவந்தாதி, மூத்ததிருப்பதிகம் ஆகிய நூல்களை இயற்றினார். சிவ பக்தியில் மனதை இருத்தி இறைவன் திருவடியை அடைந்தார். 35/63- புனிதவதி-காரைக்கால் அம்மையார்.-மாங்கனித் திருவிழா சிறப்பு. சோமன் சாபம் தீர்ந்த தலம். காரைக்கால் அம்மையார் மணிமண்டபம் சிறப்பு,
வரை படம்: விரிவாக்கு(enlarge)