ஊர்:வாட்போக்கி,#தி.த-118+மு.மாணிக்கமலை. ரத்தினகிரி, ஐயர்மலை, சிவாயமலை.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீரத்னகீரீசர், ஸ்ரீஅரதானசலேஸ்வரர், ஸ்ரீமாணிக்கஈசர், ஸ்ரீமுடித்தழும்பர்(சு)
இறைவி: ஸ்ரீசுரும்பார்குழலி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீமத்தியானசுந்தரர். ஸ்ரீராஜலிங்கமூர்த்தி. ஸ்ரீகாளி, ஸ்ரீசப்தமாதர். ஸ்ரீவைரப்பெருமாள். ஸ்ரீமுருகன்-ஆறுமுகம்- 12கரங்கள். வள்ளி, தெய்வானை. ஸ்ரீகருப்பன்னன், ஸ்ரீகோடங்கி நாயக்கர், ஸ்ரீவீரபாகு,
மரம்:
தீர்-கௌரி.காவேரி.
தேர்திருவிழா.
காமிக ஆகமம்-3காலபூஜை
தி.நே-1000--1700
தி.நே.10-17
#27092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
1140 செங்குத்தான படிகள். ஆதிசேஷன், வாயு போட்டியில் சிதறிய மேருமலையின் மாணிக்கம் விழுந்த பகுதி- ரத்தினகிரி. காலை- கடம்பர் (குளித்தலை), மதியானம்- சொக்கர் (ஐயர்மலை), அந்தி- திருவேங்கிநாதர் (ஈங்கோய்மலை) தரிசனம் சிறப்பு. உச்சியில் தரிசித்தால் பிறவாமை பலன். ஆரியராஜன் புதிய மணி மகுடத்திறக்காக இரத்தினக்கல் தேடும் போதங்கிருப்பது தெரிந்து வந்த மன்னனை, தொட்டியை காவிரி நீரால் நிரப்ப சொல்ல அது நிரம்பாததால் கோபம் கொண்ட மன்னன் அந்தணரை வாளினால் வெட்ட வர வாள் மறைந்து அருள்-வாட்போக்கி. சுயம்பு லிங்கத்தின் மேல் வெட்டுப்பட்ட தழும்பு-பொய்வாசிக் கொப்பரை-சிவராத்திரி முன், பின் நாளில் சூரியஒளி. பாஸ்கரத் தலம். இடையன் ஒருவர் தன் பசுக் கூட்டத்தில் பாலைக் கறந்து தினமும் வாட்போக்கி நாதருக்கு அபிஷேகம் செய்து வந்தான். ஒருநாள் பாலை மலைப்படியில் வைத்துவிட்டு சிறிது அயர்ந்திருக்க காகம் அக்குடத்தை தள்ளிவிட பால் சிதறியதால் அன்றைய அபிசேகம் செய்ய முடியவில்லை என்பதால் வருந்தி தன் தலையை வெட்ட முனையும்போது சிவன் தோன்றி மலை முழுவதும் என்னுடல். கீழே கவிழ்ந்த பாலால் நான் குளிர்ந்தேன் நீ கவலை கொள்ளவேண்டாம் என அருள். அந்த உயரத்திற்கு இனி காகம் வராமல் இருக்க அருள். -காகம் அனுகாமலை. அகத்தியர் வழிபட்டு அருள். இந்திரன், சூரியன், உரோமசமுனி சயந்தன், வாயு, ஆதிசேஷன் வழிபட்டது. வாயுவும் ஆதிசேஷனும் தங்கள் போட்டியால் கயிலையை பெயர்த்த பாவம் நீங்க வழிபட்டு குற்றம் நீங்கியது. சூரியன் சகோதரன் இடி தன் சகோதரனுக்காக வழிபட்டு அசுரர்களை வெல்ல சக்தி பெற்றுத் தந்தான். குழந்தையில்லா ஒருவர் தலயாத்திரை வந்து தனக்கு குழந்தை வரமளித்தால் தன் தலையை கொடுப்பதாக சத்தியம். தன் ஊருக்கு சென்று உறவிடம் சொன்னார். சில நாளில் கருவுற்றபின் குழந்தை பிறந்தது. சத்தியம் மறந்தவருக்கு நினைவூட்டவே தன் குடும்பத்துடன் இங்கு வந்து வைராக்கியமாக தலையை வெட்டி வழிபட்டதால்-வைரப் பெருமாள். சித்திரை பெருவிழா.மேற்கு சன்னதி. அப்பர் -பாடல் பெற்ற தலம். சுந்தரர் சேரமானுடன் சென்றபோது மலை லிங்க வடிவில் காட்சுயளிக்க சுந்தரர் தனக்கு பொன்னும் பொருளும் கேட்க பாறையிலிருந்து பொன் சொறிந்தது- பொன்னிடும் பாறை. ஒன்றுபாதி இடத்தில் சுந்தரருக்கு காட்சி. அந்தரத்தில் தொங்கும் பாறை- மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி பாறையின் கீழ் அமர்ந்து சகுனம் பார்த்தல். கம்பம் கட்டும் இடம்- ஏவல் பில்லி சூன்யம் ஆகியவற்றிற்கு குறைகளைக் கூறி நூல்கட்டிவழிபாடு. கருப்பண்ணசாமி- யாருக்கும் தெரியக்கூடாது என்கிற இரகசிய விஷயங்களைச் சொல்லி ஓர் பூட்டை பூட்டி சாவியை மலையில் எறிந்துவிடுவது பழக்கம். பொன்னிடும் பாறையிலிருந்து 18ம் படியில் சத்தியம் செய்தால் அதை நம்பி நீதி மன்றத்திலிருக்கும் வழக்குகளைக் கூட திரும்ப பெறுவது வழக்கம். சமணர்கள் ஐந்து பேர்வாழ்ந்து ஐயன் மலை மருவி ஐயர்மலை. ஆரியமன்னர் சமணர்களை அழிக்க அவர்கள் சூழ்ச்சிசெய்து படைத்தலைவன் வீரபாகுவையும் மற்றவீரகள் இருவரையும் சிரச்சேதம் செய்தனர்-குலதெய்வமாக வழிபாடு. இரண்டு பிளவுபட்ட பாறைகள் சேர்த்தால் ஒன்று சேரும் சிறந்த அமைப்பு- பாறைச் சகோதரிகள். லட்சதீப, ஏகாளியர், காக்கை என மொத்தம் 21 மண்டபங்கள் மலைப் பாதையில். 8 பாறைகளுக்கு இடையில் உள்ள ஒன்பதாவது பறையில் கோவில்-மாணிக்கமலை
வரை படம்: விரிவாக்கு(enlarge)