ஊர்: கும்பகோணம்#
மூலவர்: ஸ்ரீகரும்பாயிரம்பிள்ளையார்
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீகாசிவிசாலாட்சி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபாலமுருகன்
மரம்:
தீர்:
தி.நே-0630-1200,1630-2030
# 21-12-2018-குருஸ்ரீ பயணித்தது(2)
வியாபாரி ஒருவன் கரும்பை வண்டியில் ஏற்றி அதைச் சக்கரை ஆலைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு சிறுவன் ஒரு கரும்பு கேட்க தர விருப்பமில்லாதவன் கரும்பு அல்ல இது நாணல் குச்சி மாதிரி சுவைத்தால் உப்பு கரிக்கும் எனச் சொல்ல, நல்ல சுவைதரும் கரும்மை வைத்துக் கொண்டு இப்படி பொய் கூறுகிறானே என்று நினைத்த சிறுவன் இது உண்மையாகவே நாணல் குச்சிகளாய் மாறி உன் தேவைக்கு பயன்படாமல் போகும் என கூறினான். வியாபாரி ஆலைக்குச் சென்று கரும்பை இறக்க அங்கிருந்தவர்கள் இது என்ன நாணல் குச்சிபோலிருக்கின்றது. இது நாள்வரை இப்படித்தான் ஏமாற்றியிருக்கின்றாயா என்றனர். அதிர்ச்சியடைந்த வியாபாரி நடந்ததை எண்ணிப்பார்க்க அந்த சிறுவன் கூறியது நினைவிற்கு வந்தது. அப்போதுதான் அது பிள்ளையார் என்று புரிய உடன் விநாயகரிடம் வந்து மன்னிக்க வேண்ட மீண்டும் கரும்புகளாக மாறியது- அன்று முதல் கரும்பாயிரம் பிள்ளையார்
வரை படம்: விரிவாக்கு(enlarge)