ஊர்:திருத்துருத்தி.குத்தாலம்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமன்மதீசுவரர்-ருத்திராட்ச பந்தலில்
இறைவி: ஸ்ரீஆதிசக்தி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீநேத்திரகண்ட விநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை. ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீபைரவர்,
மரம்:
தீர்:குளம்
நான்கு கால பூஜைகள்
தி.நே-0700-1200,1700-2000
#09062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
800 ஆண்டுகள் பழமை. இறைவன் யோக நிலையில் இருந்தார். உயிர்களும் ஆழ்ந்த நிலையில் மயங்கி இருந்தன. பத்மாசூரன் தேவர்களை, முனிவர்களை மிகவும் துன்புறுத்தினான். இவை பற்றி சொல்ல மூவுலகத்தினரும் சிவனிடம் சென்றனர். சிவன் நிஷ்டையில் இருப்பதால் நந்தி அனுமதி தரவில்லை. காத்திருந்தனர் அனைவரும். அப்போது இந்திரன் கனவில் தோன்றி சிவன் எனக்கும் பர்வத ராஜன் மகளுக்கும் திருமணம் நடைபெறும். அபோது ஒரு மகன் பிறப்பான் அவனால் உங்கள் துயர் தீரும் என்பதே அது. இது பற்றி கலந்து ஆலோசித்த திருமால், பிரம்மா , இந்திரன் சிவன் நிஷ்டையில் இருந்தால் எப்போது மகன் பிறப்பான் என்று இதற்கு ஓர் உபாயம் தேட நாரதர் மன்மதனை நினைவுபடுத்த அனைவரும் மன்மதனை வரவழைத்தனர். சிவன்மீது பாணம் தொடுக்கச் சொல்ல பயந்த மன்மதனை பலகூறி தேற்றி இது 33கோடி தேவர்கள் சார்ந்த செயல், நீ உனது கடமையைச் செய் என்றனர். மன்மதன் கயிலை சென்றான். அந்த பகுதியை மாயமயக்கத்தில் ஆழ்த்த அம்பெய்தான். அதைக் கண்ட நந்தி அவைகளை ஆகாயத்திலே நிறுத்தினார். மன்மதன் நந்தியம்பெருமானை வழிபட்டு தன் நிலை பற்றி கூறி சிவனை சந்திக்க மார்க்கம் கேட்க மேற்கு வாயில் வழி செல்ல ஆலோசனை. சென்றான். கண்டான். தொடுத்தான். முக்கண் திறந்தது. எறிந்து சாம்பலானான். அருகிலிருந்த ரதி அலறினாள். உயிர் பிச்சைக் கேட்டாள். பார்வதி திருமணம் முடிந்த நாள் மன்மதன் வருவான் என அருள். அவ்வாறே பார்வதியை மணந்தபின் இங்கு மன்மதனுக்கு உயிர். ரதியின் கண்களுக்கு மட்டும் உருவமாய், மற்றவர்களுக்கு அருவமாய் இருக்க அருள். மன்மதன் தான் மீண்டும் இது போன்றதொரு பிழை செய்யாதிருக்க வேண்டி வழிபட்டதால் மன்மதீஸ்வரர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)