ஊர்:திருத்துருத்தி.குத்தாலம்#:
மூலவர்: ஸ்ரீஆதிகேசவபெருமாள்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீ:செங்கமலத்தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீஆஞ்சநேயர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1130,1700-2000
#09062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
கயிலையில் நிஷ்டை கலைந்து சிவன் அமர்ந்திருக்க உமை தங்களின் திருமணம் பற்றி கேட்க பிரம்மனின் மகனாகிய தட்சன் உன் தந்தை கர்வமிகுதியால் என்னை அழைக்காமல் யாகம் செய்ய என் அனுமதியின்றி நீ அங்கு சென்று அவமானப்பட்டு தீயில் விழுந்து உடலை நீக்கி மீண்டும் பருவத ராஜகுமரியாய் பிறந்து தவமிருந்து என்னை மணந்தாய். இதில் நினைப்பதற்கு என்ன இருக்கின்றது என்றார். உமை மீண்டும் ஒருமுறை மனம் திருப்தியுரும்படி திருமணம் நடக்க தன் ஆவலைத் தெரிவிக்க சிவன் அப்படியென்றால் பிரம்ம கல்பம்வரை காத்திருக்கச் சொன்னார். அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்ற வருத்தம் உமையின் முகத்தில் தெரியக் கோபம் கொண்ட சிவன் அவளைப் பசுவாக பிறக்க சாபமிட்டார். சுதாரித்துக் கொண்ட உமை வருந்தி மன்னிப்பு கோர சிவன் நீ பசுவாக இருக்கும் காலத்தில் தேவர்களும் சப்த மாதர்களும் உன்னுடன் பசுவாக வருவர். உன் தமையன் மேய்ப்பவனாக இருப்பான். அந்தப் பகுதி காவிரி அருகில் உள்ள அரசங்காடு, பூவலங்காடு எனும் பகுதியாகும். நீ உன் மடிப்பாலை என்மீது பொழிவாய். நான் விடையாகவந்து உன்னை உருமாற்றி திருமணம் செய்வேன் என்றார். அதன்படி திருமணம் திருத்துருத்தியில் நடைபெற அதை உடனிருந்து பார்த்த திருமால் தானும் அங்கேயே இருக்க ஆசைப்பட்டு சிவனிடம் தெரிவிக்க காளி குடியிருக்கும் இடத்திற்கு தெற்கே உள்ள இடத்தில் அமர்வாய் என ஈசன் அருளிய இடம்- தங்கை பசுவைக் காக்க அமர்ந்தமையால் ஆதிகேசவப்பெருமாள்,
வரை படம்: விரிவாக்கு(enlarge)