ஊர்: திருஆலவாய்#.தி.த-245+மு+அ-84. மதுரை. கடம்பவனம். கூடல், பூலோககைலாயம், நான்மாடக்கூடல்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசோமசுந்தரக்கடவுள், ஸ்ரீசொக்கலிங்கநாதர், ஸ்ரீசொக்கேசர், ஸ்ரீஆலவாயண்ணல்,ஸ்ரீசொக்கநாதர்(சு)
இறைவி: ஸ்ரீமீனாட்சி,அங்கயற்கண்ணி
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீபிள்ளைதாய்ச்சியம்மன். ஸ்ரீமுக்குறுணிவிநாயகர்-8'உயரம்,ஸ்ரீஐராவதவிநாயகர். ஸ்ரீகலைமகள், ஸ்ரீநடராசர். ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீபிட்சாடனார், ஸ்ரீகூடலிங்கம், ஸ்ரீபராசக்தி, ஸ்ரீசுந்தரலிங்கம், ஸ்ரீகல்யாணசுந்தரேசுவரர், ஸ்ரீவீரபத்ரர், ஸ்ரீஜ்வாரலிங்கம், ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீசித்தர்சன்னதி. ஸ்ரீதுர்கை சங்குசக்கரத்துடன். ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீபூவ, நிருதிலிங்கங்கள், ஸ்ரீஅக்னி-அகோரவீரபத்ரர்கள்.ஸ்ரீகூடல்குமரர்-ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி,தெய்வானையுடன் .மயில்மீது,
4புறமும்9நி.ராஜகோபுரங்கள்.150'கிழக்குகோபுரம். வடக்கு, மேற்கு, 7நி. சித்ரகோபுரம், நடுகட்டு. கடக, பலகை, சின்னமொட்டை, சந்நதி, இடபக்குறிகோபுரங்கள்-14. 152'தெற்குகோபுரம்
தீர்-பொற்றாமரைக்குளம், எழுகடல், கிருதுமாலை, கொண்டாழி, தெப்பக்குளம், புறத்தொட்டி, நின்மாலிய.
மரம்-கடம்பு.
வி-இந்திர,விண்ணழி
தெப்பத்திருவிழா-தை
தேர்திருவிழா-சித்திரை.
தி.நே-06-12,16-21
#08022005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
தேவஸ்தான தங்கும் விடுதி தொலைபேசி- 0452-2344360, 2345503
பாண்டிய மன்னனுக்கு 3 ஸ்தனங்கள் உடைய பெண் பிறக்க, அவள் கண்வன் வரும்போது அந்த மூன்றாவது ஸ்தனம் மறையும் என அசரீரி. தடாதகை என்ற அவள் மன்னன் மறைவிற்குப்பின் அரசாண்டாள். சிவனைக் கண்டவுடன் 3வது ஸ்தனம் மறைய அவரே தன் கணவன் எனக் கண்டாள். பின்னொருநாள் சிவன்- சொக்கனுக்கும் தடாதகை-மீனாட்சிக்கும் திருமணம் நடைபெற்றது. சொக்கநாதர்-மீனாட்சியாக அருளாட்சி. அம்பாள். 8தூண்கள் 8சக்தி வடிவங்கள். ஊஞ்சல், கண்ணாடி, கிளிக்கூட்டு மண்டபங்கள் சிறப்பு. 64-திருவிளை யாடல்களை நிகழ்திய தலம். வாலி. சுக்ரீவன், திரௌபதி, பாண்டவர்கள், புருஷாமிருகம் சிற்பங்கள். தமிழ்சங்கம் அமைந்த தலம். பொற்றாமரைக் குளம். கபிலர், நக்கீரர், பரனர் வாழ்ந்தபதி. பஞ்சசபைகளில் வெள்ளிசபை-1/5. மதுரை ஸ்ரீச்க்ர வடிவில் இருக்கின்றது அதன் நடிவில் பிந்துவில் மீனாட்சி அமர்ந்திருப்பதால் சிறந்த சியாமளா பீடம். சியாமளா வர்ணம் கருநீலம். ச்யாம்- பச்சை. மீனாட்சியை மனோன்மணி என தசமகாவித்தை கூருவதால்-மணேன்மணிபீடம். முப்பெருஞ் சக்தி பீடங்களில் ஒன்று. நாகம் உமிழ்ந்த விஷத்தை அமுதத்தால் மாற்றி மதுரமாக்கியதால் மதுரை. அணியாயிருந்த பாம்பு வட்டமாய் வாலை வாயாற் கவ்வி மதுரையின் எல்லையை காட்டியது-ஆலவாய். கடம்பமரம் இருந்த அடர்ந்த காடு-கடம்பவனம். இயல் இசை நாடகங்களுக்குரிய கலை மற்றும் சிற்பக் கோவில். இந்திரன் பூஜிப்பதற்கு பொற்றாமரை பெற்றத் தலம். குமரகுருபரர் மீனாட்சி பிள்ளைத் தமிழ் அரங்கேறியத் தலம். பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்றத் தலம். சம்பந்தர் அனல்வாதம் புனல் வாதம் செய்த தலம். அன்னைக்கு முதல் வழி பாடு. முக்குறுணி விநாயகர். கம்பத்தடி மண்டபம்- அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்ரர், ஊர்த்துவ தாண்டவர், காளி சிற்பங்கள், ஆடி வீதி- இசைத் தூண்கள்- 240'நீx250'அ-சித்ரசபை- 985தூண்கள் நேர்கோட்டில், 5x22- 1000கால் மண்டபம், திருமலை நாயக்கர் மகால், நடராசர்-10கரங்களுடன் கால் மாறியபடி நடன காட்சி சிறப்பு. கருவரை விமானம் பொன்வேய்ந்தது. சங்கப்புலவர் 49பேர். யோக நிலையில் துவாத சாந்த தலம். சித்திரை பௌர்ணமி திருவிழா. பாண்டியன் மனைவி மங்கையர்கரசி, அமைச்சர் குலச்சிறை நாயானார் சிவன் பக்தர்கள், மன்னன் வெப்ப நோயால் அவதிப்படும்போது சம்பந்தரை வேண்டி வரவழைத்து தீர்த்து வைத்தனர். நின்ற சீர்மாரன் கூன் நிமிர்ந்திடவும் சைவம் தழுவினார். 49/63 நெடுமாறன் நாயனார். சிவனுக்கு சந்தன காப்பு செய்ய கைமூட்டை வைத்து அரைக்க இரத்தம் வரக்கண்ட இறைவன் அருள். யாணை மாலையிட அனைவரும் சைவத்தை தழுவ நாயனார் உத்திராட்சம் திருநீரு அணிந்து மன்னரானார். கல்யானை கரும்பு தின்ற எல்லாம் வல்ல சித்தர் சன்னதி. 50/63-மூர்த்திநாயனார். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(165-169)- பெற்ற தலம்.
தன் தலையில் உள்ள சந்திரனிடமிருந்து மதுவைப் பொழிந்து நாகம் உமிழ்ந்த நஞ்சை போக்கி புனிதப்படுத்திய இடமான மதுரையில் மீனாட்சி அருளாட்சி புரியும் கர்பகிரகத்தின் முன் நின்று சங்கரர் ஸ்ரீமீனாட்சி பஞ்சரத்தினம் பாடி மகிழ்ந்தார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)