ஊர்:மணச்சநல்லூர்#
மூலவர்: இறைவன் ஸ்ரீபூமிநாதர்(சு)
இறைவி: ஸ்ரீதர்மசம்பந்தனி
தாயார்: உற்சவர்:-ஸ்ரீநடராஜர்,-சிவகாமி
பிறசன்னதிகள்: ஸ்ரீவாஸ்து புருஷன், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன், ஸ்ரீகாசி விஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீமுருகன் வள்ளி, தெய்வானை
மூன்று நிலை ராஜ கோபுரம்.
மரம்-வண்னி மரம். வில்வம்
திருத்தேர் விழா திநே.0600-1130,1600-2000
#25092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
அசுரன் அந்தாகாசூரன் தேவர்களுக்குத் தொல்லைத்தர தேவர்கள் சிவனிடம் முறையிட சிவன் அந்தகாசூரனை அழித்தார். அப்போது சிவனின் நெற்றியிலிருந்து கீழே விழுந்த வியர்வையிலிருந்து ஓர் பூதம் தோன்றியது. அது பசி மிகுதியால் போரில் இறந்த உடல்களைத் தின்றது. அப்போதும் அதன் பசி அடங்காமல் இருக்கவே அது சிவனிடன் தன் பசியாற மூன்று உலகங்களையும் அழித்து திண்னும் ஆற்றல் கேட்டுப் பெற்றது. அதன்படி பூமியை அழிக்க ஆரம்பிக்க பிரம்மாவும் தேவர்களும் அந்த பூதத்தை நிலத்தில் அழுத்திப் பிடித்து கட்டிவிட்டனர் அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்போது எனக்கு பசிக்கின்றது என் உணவிற்கு ஏதாவது வழி செய்யுங்கள் என பிரம்மாவிடம் கேட்டது. அவர் உலகில் பூமி பூஜை செய்யும்போது உனக்கு உணவு கிடைக்கும் என ஆசி வழங்கினார்.. அதன் படி எங்கு பூஜை நடந்தாலும் அதற்கு உணவு கிடைக்க அந்த பூதத்திற்கு வாஸ்து புருஷன் என பெயரிட்டார். சிவனுக்கும் அங்கு கோவில் எழுப்பப் பட்டது- பூமிநாதர். மனிதனுக்கு வீடு, சந்நியாசிக்கு ஆசிரமம், அரசனுக்கு அரன்மணை, உலக உயிர்களுக்கு ஆகாயம் எல்லாம் வாஸ்து சாஸ்திரப்படி அமையவேண்டும். வாஸ்து சாஸ்திரம் தேவர் உலக சிற்பி விஸ்வகர்மாவினால் உருவாக்கப் பட்டது. அன்னையின் முன் மகாமேரு பிரதிஷ்டை. இந்திரன் சாபம்பெற்ரு வழிபட்டதலம். சித்திரை10,11,12 தேதிகளி சூரியன் பூஜை. வைகாசி விசாகம் பிரமோற்சவம்-10நாட்கள்., நவராத்திரி 9நாட்கள் சிறப்பு.
வீடு கட்ட விரும்புவோர் அந்த மனையில் வடகிழக்கு மூலையில் மூன்று பிடி மண் எடுத்து மஞ்சள் துணியில் கட்டி கொண்டு வந்து பூ பழங்களுடன் முடிப்பையும் வைத்து அர்ச்சனை செய்து.. பின் கோவிலை முதல் சுற்றின்போது தாங்கள் கொண்டுவந்த ஒரு பிடி மண்ணை எடுத்து வில்வ மரத்தடியில் பொட்டுவிட்டு இரண்டாவது சுற்றில் வன்னி மரத்தடியில் மகா ருத்ர யாகம் செய்த சாம்பலை ஒரு பிடி எடுத்து தங்களிடம் இருக்கும் மண் முடிப்பில் சேர்த்துக் கொண்டு மூன்றாவது சுற்றில் வலம் வந்து நவக்கிரகநாயகர்களையும் வல்ம் வந்து கொடி மரத்தின் முன் விழுந்து வணங்கி துணி முடிப்பை வீட்டில் பூஜை அறையில் வைக்க வேண்டும். மண் எடுத்த இடத்தில் முடிப்பிலிருந்து பாதியைப் போட்டு மீதியை பூஜை அறையில் வைத்திருக்கவும். விரைவில் கோரிக்கை நிறைவேறும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)