ஊர்:கடலங்குடி
மூலவர்:ஸ்ரீராஜகோபாலசாமி நின்றகோலம் -ருக்குமணி,சத்யபாமா
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்: ஸ்ரீவரதராஜபெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி.
பிறசன்னதிகள்: நாரதர் தனிச்சன்னதி
ஐந்து நிலை ராஜகோபுரம்
நான்கு கால பூஜைகள்
மரம்:
தீர்: தி.நே.0700-1000,1700-2000
நாரதர் பெண்ணாசை கொண்டதால் பேடியாகி விஷ்னு சாபம் தீரவழிபட்ட தலம். நாரதர் தவமிருகும்போது மகிழமரத்தின் பழங்கள் மேல் விழ மகிழம் காய்க்காமல் இருக்க வும், குளத்தில் நீராடும்போது தாமரை மலர்கள் இடைஞ்சலாக இருக்க இங்கு தாமரை பூக்காமல் இருக்கவும் சாபமிட்டார் நாரதர். பூக்காத பொய்கை-பூத்தாலும் காய்க்காத மகிழ மரம். குடும்ப அமைக்கு ஒற்றுமைக்கு வழிபாடு. வகுளம்-மகிழமரம்-ஆரண்யம்-காடு-வகுளாரண்யம்
வைகுந்தத்தில் உரையாடலின்போது தான் பெண்ணாசை இல்லாதவர் என நாரதர் கர்வத்துடன் கூற அதைப் பரிசோதிக்க எண்ணிய திருமாள் நாரதர் சொல்லும் வழியில் ஓர் பசுஞ் சோலையையும் அதில் ஒரு பெண் படுத்திருக்கவும் செய்தார். அப்பெண்ணைக் கண்ட நாரதர் மையல் மேலிட அவளை திருமணம் செய்து கொள்ள விருப்புவதாக கூறினார். அப்பெண் நான் நாராயணன் போல் உள்ள ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றாள். நாரதர் எப்போதும் நாராயணன் திருநாமத்தை உச்சரிக்கும் தனக்கு அந்த நாரயணன்போல் உரு கொள்வதில் சிக்கலில்லை நான் திரும்பி வரும் வரையில் நீ இங்கேயே இரு எனக் கூறி வைகுந்தம் சென்றார். திருமாலிடம் பூவுலகில் நடந்த விசயத்தை மாற்றி ஒரு பெண்ணைக் கண்டதாகவும் அவள் சபதப்படி தங்களது சங்கு சக்கரத்தைத் தந்தால் நான் அவளிடம் காண்பித்து திரும்பிவந்து விடுவேன் என்றார். திருமால் சங்கு சக்கரத்தைக் கொடுக்க அதை எடுத்துக் கொண்டு பூவுலகம் சென்றவர் அங்கு அந்த பெண்ணைக் காணாமல் சேர்ந்துபோனார். அப்போதுதான் இது திருமால் செய்த நாடகம் என்பது புரிந்து அவர் கர்வம் அழிந்து வைகுந்தம் திரும்பினார். அவரைப் பார்த்த திருமால் எதை விரும்பி என்னிடம் மறைத்து பொய் கூரினாயோ அந்தச் செயலுக்காக பேடியாக மாற சாபமிட்டார். நாரதர் வகுளாரண்ய சேத்திரமாகிய இங்கு வந்து வழிபட்டு சாபம் நீங்க அருள் பெற்றார்.- கடலங்குடி
வரை படம்: விரிவாக்கு(enlarge)