ஊர்:குரங்கணி
மூலவர்: ஸ்ரீமுத்துமாலையம்மன்.குழக்கு முக தரிசனம்
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீநாராயணர் மெற்கு நோக்கி ஸ்ரீதேவி ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீசந்தனமாரி, ஸ்ரீபிரம்மசக்தி, ஸ்ரீமுப்பிடாதி அம்மன், ஸ்ரீபத்ரகாளி, ஸ்ரீசக்தியம்மன், ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீஉஜ்ஜயினி மாகாளியம்மன், ஸ்ரீவண்டிமலையச்சி, ஸ்ரீஅக்னியம்மன், சப்த கன்னியர் ஆகிய காவல் தெய்வங்கள். பனையடியான், வைரவர், வீரபத்திரர், விநாயகர், நவகிரகங்கள்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
இராவணன் தன்னை கவர்ந்து சென்றபோது தான் கொண்டு செல்லப்படும் திசையை அறிவிக்க தன் கழுத்தில் இருந்த முத்து மாலையை சீதை அறுத்து வீச, சீதையை தேடி அனுமனுடன் ராமர் வரும்போது அனுமன் முத்து மாலையை கண்டு இராமரிடம் கொடுக்க அதை இராமர் கிழக்கு முகமாக நின்று மேற்கு முகமாக பார்த்ததால் இங்கு நாராயணசாமி கோவில் மேற்கு முகமாக உள்ளது.
இலங்கை செல்ல வானரப்படைகள் இங்கு அணிவகுத்து நின்றதால் குரங்கு+அணி என்பது குரங்கணி என இவ்விடத்தின் பெயரானது.
ஆனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை பெருவிழா. 15நாட்கள்.
அம்மன் கோவிலுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து கொண்டுவரும் நீரை நாராயணசாமி கோவிலில் வைத்து விடுவர். மதியம் அர்ச்சகர் இராமரும் லட்சுமணனும் தங்கியிருந்த ஆலமரத்தடியில் எழும்பியுள்ள வீடு என்ற கோவிலுக்கு அந்த நீரை நிறைகுடத்துடன் எடுத்துச் சென்ரு சிறப்பு பூஜை நடத்தி பருப்புக் குழம்புடன் பனை ஓலையில் அன்னத்தை படைத்து பூஜை முடிந்ததும் நிறை குடத்திலிருக்கும் நீரை பக்தர்ளின் முகத்தில் தீர்த்தமாக தெளித்து விபூதி பிரசாதம் தருவார். இதனால் பேய் பிசாசு தீயக்குணம் அண்டியவர்கள் குணமடைவர்.
வரலாறு: திரேதயுகத்தில் தாமிரபரணிக் கரையில் கடுந்தவமிருந்த சத்யமாமுனிவரின் தவத்தின் வெப்பம் கைலாயம் வரைச் செல்ல எதனால் அந்த வெப்பம் என்பதை அறிய பூமியை உமை பார்த்தபோது அந்த வெப்பத்தின் தாக்கத்தால் அவர் உடலில் வியர்வை ஏற்பட்டு அது அந்த யாகத் தீயில் வீழ்ந்தது. யாகக் குண்ட்த்தில் விழுந்த அந்த தீ உடனே இருபத்தொரு கன்னியர்களாக மாறியது. அவர்களின் கழுத்தில் முத்துமாலை தகதகவென் மின்னியது. அக்கன்னியர்கள் பூமியை ஆவலுடன் சுற்றிவர தீர்மானித்து பொதிகை மலையைச் சுற்றிவந்தனர். தாமிரபராணியில் குளித்து ஆனந்தம் அடைய நினைத்து தங்கள் கழுத்தில் இருந்த முத்து மாலையை கழற்றி ஓர் இடத்தில் வைத்து விட்டு நீராடி வந்து பார்த்தபோது அத்தனை மாலைகளும் ஒன்று சேர்ந்து ஒரே ஜோதியாகி மின்னியது. கன்னியர்கள் அதை வணங்கி புண்ணியத் தலங்களைத் தரிசிக்கப் புறப்பட்டனர்.
கலியுகத்தில் தாமிரபரணி ஆற்றின் தென் பகுதியில் பனை மரங்கள் அதிமாக இருந்தன. பனையடியான் என்பவன் அங்கு பனை ஏறி பதனி சேகரித்துக் கொண்டிருந்தான். வழக்கதிற்கு அதிமாக அன்று அதிக பதனீர் சேர்ந்திருந்தது. சந்தோஷத்துடன் திரும்பிய அவனுக்கு ஓர் இடத்தில் ஜோதி தெரிய அதை நோக்கிச் சென்றான். ஜோதியின் ஒளி அவன் கண்களைக் கூச தன் கையிலிருந்த பானையை அதன்மேல் கவிழ்த்துவிட்டு இரவு வந்து யாருக்கும் தெரியாமல் அந்த புதையலை எடுத்துச் சென்று விடலாம் என நினைத்தான். ஆனால் அவனால் அன்ரிரவு எவ்வளவு முயற்சி செய்தும் அதை எடுக்க முடியாமல் சோர்ந்து வீடு திரும்பினான். அவன் கனவில் நீ பானை போட்டு மூடியது புதையல் இல்லை. நான் முத்துமாலை. என்னை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை பூஜை செய்வாய் என்றது. அடுத்த நாள் காலை ஊர் மக்களிடம் சொல்லிவிட்டு பூஜை செய்ய ஆரம்பித்தான் பனையடியான்.- குரங்கணி முத்துமாலையம்மன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)