ஊர்: தின்னகோணம், திருநெற்குன்றம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபசுபதீஸ்வரர்
இறைவி: ஸ்ரீகோவிந்தவல்லி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீலிங்கோத்பவ வலம்புரி விநாயகர், ஸ்ரீசங்கரநாராயணர், ஸ்ரீலட்சுமிநாராயணர், ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீஅகத்தியர், ஸ்ரீவீனாதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசிவசக்திவேலன் வள்ளி, தெய்வானை, ஸ்ரீசொர்ணாஆகர்ஷணபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன்
மரம்: வில்வம், பன்னீர்மரம்
இரண்டுகாலபூஜை
தீர்:
தி.நே-0700--2000
கருவறையில் நான்கு தூண்கள்- வேதங்கள். இது வசந்த நவராத்திரி தலம்,பங்குனி அமாவாசையிலிருந்து 9 நாட்கள். அகத்தியர் சன்னதியில் புதகிழமை பிரம்ம முகூர்த்தத்தில் சிறப்பு பூஜை- மருந்து பிரசாதம். வில்வநீர் பிரசாதம்.
தலபுராணம்-இந்த ஊரைச் சேர்ந்த இடையன் குன்றுப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக மாடுகளை ஓட்டிச் சென்று வருவதில் ஒரு பசு மட்டும் பால் கறப்பதில்லை .. அதற்க்காண காரணத்தை அறியும்போது மேய்ச்சல் முடிந்து திரும்பும்போது அந்த குறிப்பிட்ட மாடு குன்றின்மேல் பால் பொழிவதைக் கண்ட இடையன் தடியால் அடிக்க அந்த மாடு இறந்தது. அன்று அந்தப் பகுதி மன்னன் பரந்தகச் சோழன் கனவில் இறைவன் பசு இறந்த இடத்தில் கோவில் கட்டச் சொன்னார். கோவில் கட்டி லிங்கம் பிரதிஷ்டை செய்யும் நாளில் லிங்கத்திருமேனியை நிருதி மூலையில் பிரதிஷ்டை செய்ய அசரீரி. கருவறையில் சுயம்பு மூலவராய் பசுவடிவில் நானே எழுந்தருள்வேன் என்றார். கருவறையில் முகவாயை தரையில் வைத்து படுத்திருக்கும் பசுவின் திருமேனி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)