ஊர்:நாகைக்காரோணம்.தி.த-199+மு.நாகப்பட்டிணம்.நாகை.ஆதிபுராணம்,சிவராசதானி, பார்ப்பதீச்சரம்,அரவநகரம்.நாகன்பட்டிணம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாயாரோகணேஸ்வரர்(சு)-6'உயரம், ஸ்ரீஆதிபுராணர்
இறைவி: ஸ்ரீநீலாயதாஷிதனிசன்னதி. ஸ்ரீகருந்தடங்கன்னி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆத்மலிங்கம். ஸ்ரீஅகோரவீரபத்ரர், ஸ்ரீவெண்ணெய்பிரான், ஸ்ரீகாசிவிசுவநாதர், ஸ்ரீஅருணாசலேசுவரர், ஸ்ரீதியாகராஜர்தனிசன்னதி. ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீசனீஸ்வரர். ஸ்ரீமேலக்குமரன்-ஒருமுகம்-4கரங்கள்-வள்ளி,தெய்வானையுடன்
த.வி- ஸ்ரீநாகாபரணப்பிள்ளையார்.
5நி.ராஜகோபுரம்
2பிரகாரங்கள்
தீர்-புண்டரீக,தேவ.
மரம்-மா.
6காலவழிபாடு.
தி.நே--0700-1200,1700-2100
தொலைபேசி-04365-242844
ஆதி புராணம், சிவராஜதானி, உலகின் முதல் சிவத் தலம் எனப் போற்றப்படும் தலம். புண்டரீக முனியின் தவத்தை மெச்சி அவர் காயத்தை-உடலை தன்மேனியில் ஆரோகணம் செய்த தலம். சப்தவிடங்கதலம்-1/7 சுந்தரவிடங்கர்- பாராவார தரங்க நடனம். அதிபத்தநாயனார் அவதார தலம். அகத்தியருக்கு திருமணக்காட்சி. ஆதிஷேடன் பூசித்தது. ஒரே கல்லால் செதுக்கப்பட்ட ஆறுமுகன் சிறப்பு. சப்த ரிஷிகளுக்கு ஈசன் காட்சி. கல்சங்கிலி. அஸ்திரதேவர் சிலை. ஆவணி விழா. எப்போதும் போல தன் வருமைக்காலத்திலும் தனக்கு கிடைத்த ஒரே பொன்மீனை சிவனுக்காக கடலில் விட்டுவிட பக்தி கண்டு அருள். 37/63-அதிபத்தி நாயனார். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அழுகண்ணச் சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனீஸ்வரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும்போது ஒருவருடம் ரோஹிணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் முதல் 12 வருடங்களுக்கு நாட்டில் கடும் பஞ்சம் நிலவும் என்று வசிஷ்டர் சொன்னதைக் கேட்டு அப்படி நடக்க விடாமல் செய்யவிரும்பிய தசதர மன்னன் சனியை சந்தித்து வேண்ட சனி ஒத்துக்கொள்ள மறுக்க அவருடன் போர் தொடுக்க ஆரபித்து தன் குலதெய்வமான சூரியபகவானை தொழ அவர் தசரதா சனியுடன் போர் வேண்டாம் என்றும் அவரை பிரதிஷ்டை செய்து வழி பட ஆலோசனைச் சொல்ல அதன்படி நாகைவந்து சனிப்பிரதிஷ்டை செய்து வழிபட சனி மகிழ்ந்து காட்சி அருள். சஞ்சாரிக்கும் காலத்தில் தசரதன் நாட்டு மக்கள் துன்பமடையாமல் வாழ அருள் புரிந்தார் சனிபகவான். சனிபகவான் தோஷம் நீங்க பல பரிகாரத் தலங்கள் இருந்தாலும் சனீஸ்வரனே தன்னை வழிபடின் அனுக்கிரகமூர்த்தியாய் இருந்து நன்மைகள் மட்டும் வழங்குவேன் என்று சத்யம் செய்த தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)