செல்லும் வழி: நாகப்பட்டிணம்-திருத்துறைப் பூண்டி சாலை-கருங்கன்னி+2
தகவல்கள்:
ஊர்: மகிழி-உப்பாற்றங்கரை.ஆனந்தபுரம்
மூலவர்:ஸ்ரீபச்சையம்மன்
இறைவன்: ஸ்ரீமன்னார்சாமி
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீபஞ்சமுனிகள், ஸ்ரீகாத்தாயி-கந்தாயி, ஸ்ரீவாழ்முனி, ஸ்ரீசெம்முனி, ஸ்ரீகருமுனி, ஸ்ரீமுத்துமணி, ஸ்ரீவேதமுனி, ஸ்ரீபூமுனி
மரம்:
தீர்:
தி.நே-0900-1200,1700-1800
சிறப்புகள்:
பார்வதி ஒர் எறும்பை பிடித்து சிமிழில் போட்டு அதற்கு எப்படி ஈசன் உணவளிக்கப் போகின்ரார் என பரிசோதிக்க நினைத்தாள். அந்தச் சிமிழைத் திறந்தபோது அந்த எறும்பின் வாயில் ஒரு அரிசி இருக்கக் கண்டு அதிர்ந்தாள். விளையாட்டாகச் செய்தாலும் எறும்பை மூடிவைத்து சிறையிட்ட பாவத்தை நீ அனுபவிக்க வேண்டும் என்றார். மேலும் விளையாட்டாக ஈசனின் கண்களை மூடியதால் உலகம் இருள அந்த பாவமும் சூழ்ந்தது..பிருங்கி முனிவர் ஈசனை மட்டும் வலம் வந்து வழிபட்டது அவள் மந்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது. தன் பாவங்களை போக்கவும் ஈசனின் உடலில் அங்கமாகவும் வேண்டி தவம் இருக்க ஈசனிடம் அனுமதி கேட்டுப் புறப்பட்டாள்.
பூவுலகில் ஈசனின் தலங்களை தரிசித்துகொண்டு வரும்போது உஜ்ஜயினை ஆண்ட அக்னிவீரன் பார்வதியைக் கண்டு அவளை மோகிப்பதாகக் கூற அவனை சினந்து கடிந்து கூறினாலும் அவன் தொடர்ந்து தொந்தரவு தர ஈசனை துதித்தாள். அதன் வெளிப்பாடாக திருமால், பிரம்மா, தேவர்கள் முனிவர்கள் அனைவரும் துணையாக வந்தனர். வானுயர விஸ்வரூபம் எடுத்த திருமால் அக்னிவீரனை அழித்தார். அவனது சகோதரர்களை ஆகாயவீரனை செம்முனியும்,மற்ற ஜலவீரன், சண்டவீரன், ரணவீரன்ம் கோட்டை வீரன் ஆகியோரை கருமுனி, முத்துமணி, வேதமுனி, பூமுனி ஆகியோர் அழித்தனர். அடுத்து அக்னி வீரனின் மகன் வீரமுத்து வர அவனை வாழ்முனி அழிக்க முற்படும்போது அவன் மனைவி உயிர் பிச்சை கேட்க அவனை அம்பிகை கோவில் காவலனாக இருக்கச் செய்தார் திருமால்.
தன் அம்சமும் கங்கையின் அம்சமும் ஒன்று சேர காந்தாயி தோன்றினாள். பின்னர்வெள்ளாற்றங்கரையில் மகிழமரத்தடியை தேர்வு செய்து தவம் இஅயற்றத் தொடங்கினாள்.உரிய காலம் வந்ததும் காஞ்சி நகரில் தவம் செய்ய புறப்பட்டாள். தவத்தை நிறைவு செய்து ஈசனின் மேனியில் பங்கு பெற்றதும் இங்கு வந்து ஈசனுடன் குடியேறினாள்.