ஊர்:திருவரமங்கை,நாங்குனேரி.தி.தே-79,#வனமாமலை.தோத்தாத்ரி.:
மூலவர்: ஸ்ரீதோத்தாத்திரிநாதன்(சு)வானமாமலை,ஸ்ரீதேவி,பூமிதேவி, ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசுகின்றனர், ஸ்ரீபர்மபதநாதன்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீவரமங்கை-தனிசன்னதி.
உ:
உற்சவர்:ஸ்ரீதெய்வநாயகன்-
பிறசன்னதிகள்: ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீராமர், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீவேணுகோபாலன்-பாமாருக்மணி, ஸ்ரீஉடையவர் தனித்தனிசன்னதிகள். ஸ்ரீலட்சுமி வராகப்பெருமாள், ஸ்ரீவிஷ்வக்னேசர், ஸ்ரீகண்ணன், ஸ்ரீலட்சுமி நாராயணன், ஸ்ரீநிவாசன்
7நி.ராஜகோபுரம்.
தீர்-இந்திரபுஷ்கரணி.சேற்றுத்தாமரை
மரம்-மா,
வி-நந்தவர்த்தன
தி.நே-0600-1130,1700-2000
#-01-10-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
நாங்குனேரிமடம்-0465-250119
பெருமானுக்கு தைலாபி ஷேகம்-உண்டால் சகல வியாதிகள் தீரும். சுசிலை, பிரியம்வதன் தவம் செய்து பேயுரு நீங்கி மணம். நாய்உரு பெற்ற மன்னன் நீராடி வழிபட்டு சுய உருவம் அடைந்த தலம். சிந்து தேசத்து மன்னன் காட்டிற்கு வேட்டைக்கு சென்றவன் வழிதவறி தன் பரிவாரங்களை விட்டு வெகுதூரம்சென்று விட்டான். திக்கு தெரியாமல் தவித்தவன் அருகில் ஒரு சிறு குடிசை இருக்க உள்ளே சென்று பார்த்தான். அங்கு ஒரு கலயத்தில் புதிதாக சமைத்த உணவு இருப்பதக் கண்டான். பசி மிகுதியால் அதை எடுத்து உண்டான். அந்தக் குடிசை குசாணானா முனிவருடையது. விஷ்ணுவிற்கு படையல் தயாரித்து வைத்துவிட்டு குளித்து வந்து பூஜை செய்ய நினைத்து சென்ற சமயமே சிந்து மன்னன் குடிசையில் புகுந்து படையல் உணவை உண்டது. திரும்பி வந்த முனிவர் சிந்து மன்னன் படையலை சாப்பிட்டது கண்டு கோபம் கொண்டு மன்னனை நாயாகச் சபித்தார். சாபவிமோசனத்திற்கு வழிகேட்க உன்னத தீர்த்தத்தில் நீராடும்போது சாபம் நீங்கும் என்றார். நாய் ரூபத்தில் அந்தக் காட்டிலே சுற்றிய சிந்து மன்னன் தாமரை தீர்த்தம் கண்டு அதில் இறங்க அந்த நீர் பட்டதும் அவன் சுய ரூபம் அடைந்தான்.பிரம்மனின் கர்வத்தை அடக்க திருமாலால் உருவாக்கிய மது கைடபர் இறப்பால் தனதுமேனியின் அழுக்கு நிலைபோக பூமித்தாய் தவம். ஊர்வசியும், திலேத்துமையும் அஷ்டாச்சர மந்திரத்தை உச்சரிக்க காட்சியளித்து அருகில் இருந்து சமரசம்வீச அருள். கருடன், ஆதிஷேடனைப் போல பெருமானை பிரியாமல் இருக்க தவம். மூலவருக்கு திருமஞ்சனம் செய்த எண்ணெய் கிணற்றில் சூரிய ஒளிபட்டு கொடிய வியாதிகளை தீர்க்க வல்ல மருந்து.
வரை படம்: விரிவாக்கு(enlarge)