ஊர்:திருப்பனையூர்.தி.த-190.# தாலவனம். :
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசௌந்தரேஸ்வரர்,ஸ்ரீஅழகியநாதர், ஸ்ரீதாலவனேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபிரஹந்நாயகி,பெரியநாயகி :
தாயார்
உ:
பிறசன்னதிகள்: சப்தரிஷிகள்வழிபட்ட7லிங்கங்கள், ஸ்ரீதுணையிருந்தவிநாயகர் ,ஸ்ரீபராசர முனிவர். ஸ்ரீமாற்ருரைத்த விநாயகர்.ஸ்ரீசூரியன், ஸ்ரீபைரவர், ஸ்ரீமுருகன்
தீர்-பராசர-அமிர்தபுஷ்கரணி-திருமகள்
மரம்-பனை.
தி.நே-0700-1200,1700-1900(குருக்கள் அருகில்)
# 24-10-2018-குருஸ்ரீ பயணித்தது
1300 ஆண்டுகள் பழமை.
தாலம்-பனை ஆண்பனை+ பெண்பனை சேர்ந்து வளரும் தலம். பனை மரங்கள் மிகுந்து வளர்ந்து நின்ற பகுதியாதலால் பனையூர்.
சப்தரிஷிகள், பாரசரமுனி, மகா லட்சுமி, கரிகாற்சோழன் வழிபட்டது. சோமாஸ் கந்தர்- மாங்கனியேந்திய கோலம்-சிறப்பு.
சுந்தரர் திருவாரூருக்குப் பொன் பெற்றுச் செல்லும்போது திருப்புகலூர் என நினைத்து திருப்பனையூர் வருதல். சிவன் எதிர்கொண்டழைத்து நடனம் காட்டி ஆடல்வல்ல அழகியராக அருள்.
தந்தை இளஞ்சேட் சென்னியை இழந்த கரிகாலன் தாயத்தார் எதிரிகளுக்குப் பயந்து இரும்பிடர்தலையார் என்ற புலவரின் உதவியோடு தங்கிய தலம். யானை மாலையிட்டு தேர்ந்தெடுத்தது. கரிகால் சோழனுக்கு துணையாக இருந்த விநாயகர். தன் எட்டு வயதளவும் இங்கே தங்கியிருந்த நன்றியினைக் காட்ட கரிகால் சோழன் கோவிலை செப்பனிட பணித்தான். ஆனால் அந்தப் பொன்னும் பொருளும் திருப்புகலூர் கோவில் கட்ட பயன்படுத்தப்பட்டது, குடமுழுக்கு காண வந்த கரிகாலன் உண்மையறிந்து மீதியுள்ள பொருட்களைக் கொண்டு பூதகணங்களின் உதவியுடன் கோவில் கட்டி இரு கோவில்களின் குடமுழுக்கையும் ஒன்று சேர நடத்தி மகிழ்ந்தான்.
சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)