ஊர்: இலசுப்பேட்டை
மூலவர்: ஸ்ரீசிவசுப்ரமண்யசுவாமி-வள்ளி,தெய்வானை
இறைவன்: ஸ்ரீசிவலோகநாதர்
இறைவி: ஸ்ரீசிவலோக நாயகி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசிவசக்தி விநாயகர், ஸ்ரீபாலகணபதி., ஸ்ரீஇடும்பன், ஸ்ரீநால்வர், ஸ்ரீதுர்க்கை,ஸ்ரீ காலபைரவர், ஸ்ரீநடராஜர்.
மரம்:
தீர்:
தி.நே-0630-1130,1700-2100
300 ஆண்டுகள் பழமை. மயிலம் முருகன் கோவில் உற்சவர் காணாமல் போனார். அந்த திருடன் 40 கி.மீ தூரம் சுமை தெரியால் எடுத்துச் சென்றான். அதன் பிறகு அந்தச் சிலையை அவனால் கொஞ்சம் தூரம் கூட தூக்கிக் கொண்டு செல்ல முடியாத நிலையில் யார் கண்ணிலும் படாமல் இருக்க வேண்டும் என்பதால் அருகில் இருந்த கிணற்றில் போட்டான். காலையில் அருகில் இருந்த விநாயகர் கோவிலுக்கு அபிஷேக நீர் எடுக்க வந்த அர்ச்சகர் கிணற்றில் சிலை இருப்பது கண்டு ஊர்மக்களின் முன்னிலையில் வெளியில் எடுக்கப்பட்டபோது அது மயிலத்தில் காணாமற்போன் சிலை என்பதை அறிந்து மயிலம் கோவில் அர்ச்சகர்களுக்கு தகவல் கொடுக்க அந்தச் சிலையை எடுத்துப் போக வந்து தங்கினர். அந்தச் சிலையை பிரிய மனமில்லாத அந்த ஊர்மக்கள் மற்றும் சிலையை எடுத்துப்போக வந்த அர்ச்சகர்கள் அனைவருக்கும் அன்றிரவு கனவில் தோன்றி என் விக்ரகத்தை இங்கேயே வைத்துவிட்டு மயிலத்திற்கு வேறு விக்ரகம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி மறைந்தார். அனைவருக்கும் ஒரே மாதிரியான கனவாக இருந்ததால் ஒரு குழப்பமும் இன்றி மயிலம் அர்ச்சகர்கள் அந்த விக்ரகத்தை அங்கேயே விட்டுச் சென்று மயிலதிற்கு வேறு ஒரு உற்சவரை செய்து கொண்டனர். ஊர் மக்கள் தங்களிடம் சேர்ந்த உற்சவருக்கு ஏற்ற மூல விக்ரகம் செய்து பிரதிஷ்டை செய்தனர். மண்டபத் தூண்களில் அறுபடை முருகன்கள் சிதை சிற்பங்களாக. 1975-ம் ஆண்டு புதுவை அரசின் பதக்கம் பெற்ற சிறப்பான கோவில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)