ஊர்:பந்தனைநல்லூர்.பந்தநல்லூர்
மூலவர்: ஸ்ரீஆதிகேசவப்பெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபரிமளவல்லித்தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவெங்கடாஜலபதிஸ்ரீதேவிபூதேவி, ஸ்ரீஆஞ்சநேயர்
மரம்: சரக்கொன்றை
தீர்: சூர்ய (குளம்)
மூன்றுகாலபூஜை தி.நே-0700-1200,1700-2000
பார்வதி பந்து விளையாட ஆசைப் பட்டதால் இறைவன் நான்கு வேதங்களையும் பந்தாக்கி தந்தார்.மாலை வேளையில் ஆடத்தொடங்க சூரியனஸ்தமன நேரம் வந்ததும் தேவியின் விளையாட்டிற்கு பங்கம் வந்துவிடும் என்பதால் சூரியன் மறையாது நீண்ட நேரம் நிலைத்திருக்க பகல் பொழுது அதிகமானது. உலகங்கள் சோர்ந்தன. இதை உணர்த்தச் சென்ற நாரதரையும் பின் சிவபெருமானையும் பார்வதி கண்டு கொள்ளாமல் பந்து ஆட்டத்தில் உலகை மறந்த நிலையில் இருந்ததால் சிவன் பந்தை எட்டி உதைத்துவிட்டு பசுவாக சபிக்கப்பெற்ற உமையுடன் உதவிக்கு ஆயனாக வந்த திருமால். சகோதர ஒற்றுமைக்காக வழிபாடு. நல்ல மக்கள் வாழ்ந்த ஊர் நல்லூர். கோட்டைக்குள் அமைந்த கோவில். ஒருபக்கம் சிவன். மறுபக்கம் பெருமாள். காம்போஜ மன்னர் இந்த தீர்த்த குளத்தில் மூழ்கி தன் நோய் நீங்கப் பெற்றான். விலைமாது வித்யாவதி வழிபட்டு பேரின்பம் அடைந்தாள். தோஷ நிவர்த்திக்கு பிரசாதம் படைத்து பக்தர்களுக்கு புரசை இலையில் வினியோகம்.
பிரம்மன் யாகம் செய்யும்போது விஷ்ணுவை உதாசீனப் படுத்தியதால் யாகம் நிறைவுறும் போது கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றினார்கள். அவர்கள் தவம் செய்து சாகா வரம் பெற்றனர். இந்திர லோகம் சென்ற கேசி இந்திரனின் அழகில் மயங்கி தன்னை மணக்க வேண்டினாள். இந்திரன் மறுத்ததால் தன்னை அவன் பலவந்தப்படுத்தினான் என் தன் தமையனிடம் பொய்கூற கேசன் இந்திரனோடு போர்தொடுத்தான். போரில் தோற்ற இந்திரன் ஓடி ஒளிந்தான். ரம்பையர்களைச் சிறை பிடித்தான். தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு கேசனுடன் போர் புரிந்தார். பல ஆண்டுகள் சென்றும் அவனை கொல்ல முடியவில்லை. விஷ்ணு பராசக்தியை வேண்ட அவள் வழிகாட்டிதலின் படி ஆதிசேஷனைக் கொண்டு கேசனை சுற்றி அடக்கி அவன் மேல் அமர்ந்தார் விஷ்ணு. இதனைக் கண்ட கேசி கங்கையை வரவழைக்க அவள் இரு பிரிவாக அதிசேஷனை சுற்றி சுற்றி வந்தாள். ஒன்றும் நடக்கவில்லை. பெருமாளின் பெருமை உணர்ந்து கேசி அவரை வணங்கினாள். இரண்டாகப் பிரிந்த கங்கை கோதயாறு ,பரணி ஆறு எனப்பட்டது. கேசனை அடக்கியதால் கேசவன் எனப்பட்டார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)