ஊர்:சந்திரசேகரபுரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீஆலிங்கன சந்திரசேகர், ஸ்ரீகேவல சந்திரசேகரர், ஸ்ரீஉமா சந்திரசேகரர்
இறைவி: ஸ்ரீசௌந்தராம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமனோண்மணியம்பாள், ஸ்ரீசூலினிதுர்க்கை, ஸ்ரீசங்கடஹரசுந்தரவிநாயகர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீநடராசர்-சிவகாமி, ஸ்ரீபைரவர், ஸ்ரீநாகதேவர், ஸ்ரீசனிபகவான்
முகப்புவாயில் மரம்-வெள்ளைஅலரி,3இதழ்வில்வம்,:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
ஒருவர் செய்யும் தவறுகளை மானசீகமாக பிறை சூடிய பெருமானிடம் வேண்டி மன்னிப்பு கேட்டால் பலன் கிட்டும். சந்திரன் சாபம் நீங்கியத் தலம். பிரமதேவன் மகன் தட்சன் தன் மகள் 27பேரை அழகில் சிறந்த சந்திரனுக்கு மணம் செய்வித்தபோது எல்லோரையும் சம்மாகப் பாவிக்கவேண்டும் என வாக்குறுதி பெற்றான். நாளடைவில் சந்திரன் ரேவதி, அஸ்வனி ஆகிய இருவரிடம் மட்டும் அன்பு கொண்டதால் மற்றவர்கள் தந்தையிடம் கூற அவர் சந்திரனிடம் மீண்டும் அனைவரிடமும் அன்புடன் இருக்கச் சொல்லி வலியுறுத்த அதன் பிறகும் சந்திரனின் போக்கில் மாறுதல் தெரியாததால் அவனின் அழகால் தான் கர்வம் கொண்டு இவ்வாறு செய்கின்றான் என அவனது அழகு ஒவ்வொரு கலையாக தினமும் குறைய சாபம் கொடுத்தான். சந்திரனது கலைகள் குன்ற ஆரம்பித்தன. பயந்துபோன சந்திரன் தேவேந்திரன் ஆலோசனையின் பேரில் பிரம்மாவை கண்டு விபரம்கூற அவர் தன் மகன் தன் பேச்சை கேட்கும் நிலையில் இப்போது இல்லை நீ சர்வேஸ்வரரிடம் உன் குறையைச் சொல் என்றார். சந்திரன் நந்தியம்பெருமானிடம் அனுமதி பெற்று சிவனை சந்திக்கச் சென்றபோது அவன் எல்லா கலைகளும் குறைந்து 3-ம் பிறையாக இருந்தான். ஈசன் அவனுக்கு ஆறுதல் தந்து அவனை தன் சிரசில் சூடிக்கொண்டார். சந்திரன் தன் கலை குறைந்து வருவதற்கு வருந்த சிவன் அவைகள் தேய்ந்து மீண்டும் வளரும் என அருள் புரிந்தார்-சந்திரசேகரர். காசிபர், பரத்வாஜர், அகத்தியர், புலத்தியர் வழிபட்டது. தன் தவறை உணர்ந்து மனம் திருந்தினால் ஈசனின் திருவடி மட்டுமல்லாமல் திருமுடியும் கிட்டும் என்பதற்கு சான்று. எல்லா இடத்திலும் நடராஜர் பொதுவாக ஐம்பொன்னாக இருக்கும் இங்கு கல் நடராஜரை வணங்கியபடி வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள்- சிறப்பு
வரை படம்: விரிவாக்கு(enlarge)