ஊர்:பெண்ணாடம்.தி.த-34, பெண்ணாகடம், தயராசபதி, தூங்கானைமடம், சிவவாசம். வெள்ளாற்றின்கரையில் புஷ்பவனம், புஷ்பாரன்யம், மகேந்திரபுரி, பார்வதிபுரம், சோகநாசனம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசுடர்கொழுந்தீசர்(சு), ஸ்ரீபிரளயகாலேஸ்வரர், ஸ்ரீகைவழங்கீசர்,ஸ்ரீசௌந்தரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஆமோதனம்பாள், ஸ்ரீகடந்தைநாயகி ஸ்ரீஅழகியகாதலி-4கரம்.:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், மெய்கண்ட நாயனார், சப்த கன்னியர், ஸ்ரீவிஸ்வநாதர், ஸ்ரீமுருகன், ஸ்ரீமகாலட்சுமி, பைரவர். ஸ்ரீசௌந்தரேசுவரர்30 மீட்டர் உயர கட்டுமலையில் ஸ்ரீபிரளயகாலேஸ்வரி.நடராசர். ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீநந்தி கிழக்கு நோக்கி
5நி.ரா.கோபுரம்.கருவறை விமானம் யானைவடிவில்.
தீர்-கபிலை,பார்வதி,முக்குளம்,வெள்ளாறு,இந்திர. மரம்-சண்பகம். 4காலபூஜை, தேர்த்திருவிழா
தி.நே-0700-1200,1700-2000
தொலைபேசி: 04143 222980 / 9488046050
ஆழி புரண்டக்கால் அசையாது அதிகார நந்தி மூலம் பிரளயகால வெள்ளத்தை தடுத்த தலம். எனவே நந்தி கோவில் வாயிலை நோக்கி.
சைவ சமய சித்தாந்தத்தை முழுமையாக எடுத்துரைக்கும் நூலான 'சிவஞான போதம்' எழுதிய மெய்க்கண்டார் அவதாரத் தலம்.
3புறமும் இறைவனை வணங்க சன்னல்கள்.
குடைவரைக் கோவில், சித்திரை பெருவிழா.
கலிக்கம்ப நாயனார் வீடுபேறு பெற்ற தலம். சிவனடியாருக்கு கரகநீர் உற்றி திருவடி கழுவுதல் செய்யும்போது ஒருசிவனடியார் தம்மிடம் வேலைசெய்தவர் போலிருந்ததால் நீர்வார்க்காமல் இருந்ததைப் பார்த்த கலிகம்பர் மனைவியின் கையை வெட்ட சிவன் காட்சி அருள்-கைவழங்கீசர். 62/63-கலிக்கம்பநாயானார்.
அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். சித்திரை சதய விழா - அப்பர் விண்ணப்ப நிகழ்ச்சி. (அப்பர் திருத்தோள்களில் சூலக்குறியும் இடபக் குறியும் பொறித்த நிகழ்ச்சி)
இந்திரனுக்கு பூஜைக்குரிய மலர்கள் கிடைக்காததால் பூலோகம் சென்று பறித்துவர் தேவ கன்னியர்களுக்கு கட்டளையிட்டான். பல இடங்களில் தேடி இங்கு வந்தவர்கள் பூக்கள் பூத்துக் குலுங்குவதை கண்டு ஆனந்தப்பட்டனர். பூக்களைச் சேகரித்து இந்திரனிடம் சமர்பிக்க நினைத்தவர்கள் அந்தவனத்தில் எழுந்தருளியுள்ள ஈசன் சுடர்கொழுந்தீசரைக் கண்டு அன்பு மேலீட்டால் சிவ நிலை அடைந்து அந்த மலர்களை ஈசனடியில் சமர்ப்பித்தனர். அப்படியே அவனடியில் அமர்ந்திருந்தனர். பூப்பறிக்க சென்ற தேவ கன்னியர்கள் வராமையால் சினம்கொண்ட இந்திரன் காமதேனுவை அனுப்பினான். எல்லா இடங்களிலும் தேடி இந்த வனத்தில் தேவகன்னியர்கள் இருப்பதைக் கண்டு அவர்களை நோக்கிவந்த காமதேனு ஈசனைக் கண்டு தாம் வந்த நோக்கம் மறந்து அப்படியே தானும் ஈசன் பாதத்தில் அமர்ந்திருந்தது. வெகுண்ட இந்திரன் தன் வெள்ளையானை அனுப்ப அது இந்தவனத்தில் அனைவரும் சிவன் முன் அமர்ந்திருப்பதக் கண்ணுற்று அவர்களை அழைத்துச் செல்ல அருகில்வர ஈசனுடைய ஒளியில் மயங்கி தானும் ஈசனை வணங்கி ஈசன்மேல் வெய்யிலும் மழையும் படாமல் மண்டபமாக நின்றது. இது திருத்தூங்கானை மண்டபம் எனப் பெயர் பெற்றது. என்னவாயிற்று அனைவருக்கும் எனக்கவலையுற்ற இந்திரன் இந்தவனத்தில் அனைவரையும் ஈசன் முன் கண்டு அருகே செல்லச்செல்ல தன் கோபம் அகன்று இந்திரநிலை அகன்று சிவநிலை அடைந்து இறைவனை வணங்கினான். சிவானுக்கிரகம் பெற்று தன்னுடன் அனைவரையும் அழைத்துச் சென்றான்.பூக்களை தேடிவந்த தேவகன்னியர்- பெண், அவர்களைத் தேடிவந்த காமதேனு- ஆ+வெள்ளை யானை- கடம் மற்றும் இந்திரன் பூஜை செய்தமையால் பெண்+ஆ+கடம்,
பிரளகாலத்தில் எல்லா இடமும் நீரில் மூழ்கியிருக்க நடுநாட்டில் வெள்ளாற்றங்கரையில் உள்ள இந்த இடம் மட்டும் நீரில் மூழ்காமலிருக்க அறிந்த தேவர்கள் இங்கு வந்து பார்த்தபோது அதற்கு காரணம் திருச்சுடர்கொழுந்தீசர் என அறிந்து இங்கு ஈசனை வணங்க ஈசன் நந்திக்கு ஆணையிட அவர் கிழக்கிலிருந்து வந்த நீரை உறிஞ்சி மக்களை வெள்ளத்திலிருந்து காத்தார். அன்றிலிருந்து நந்தி கிழக்கி நோக்கி.
திருநாவுக்கரசர் முன்பு சமண்ருடன் வாழ்ந்த இந்த உடலை ஏற்க இல்லையெனில் எனக்கு அந்த குறைநீங்க சூலம், இடபம் தன் கரங்களில் பொறிக்க வேண்ட ஈசன் அக்குறிகளைப் பொறித்த தலம். சௌந்திரவல்லி என்றப் பெண் பென்னாகடம் கடைவீதியிலிருந்து ஈசனை வழிபட வசதியாக கட்டப்பட்டது கட்டுமலைக் கோவில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)