ஊர்:திருக்காரகம்#தி.தே-52
மூலவர்: ஸ்ரீ:கருணாகரப்பெருமாள்-நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபத்மாமணிநாச்சியார், ஸ்ரீராமாமணிநாச்சியார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-அக்ராய,
வி-வாமன,ரம்ய.
தி.நே.0600-1200,1600-2000
#28062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
உலகளந்த பெருமாள் கோவிலில் தாயார் சன்னதிக்கு எதிரில் கருணாகரப்பெருமான் -திருக்காரகத்தான் அருள். கல்வியும், அறிவும் அளவின்றி வளர அருள். கார்ஹ மகரிஷி எவ்வளவு கற்றும் இன்னும் கற்க வேண்டும் என்ற அவாவில் சரஸ்வதியையும், ஹயக்கிரீவரையும் தவமிருந்து வரங்களைப் பெற்றதனால் கர்வம் ஏற்பட்டது. அப்போது அவர் அருகில் வந்தவர் 'கற்றது கைமண் அளவு' என போகிற போக்கில் சொல்லிவிட்டு போக அதிர்ந்த ரிஷி மீண்டும் அவரைத் தேட கண்ணுக்குப் புலப்படவில்லை. வந்தது கருணாகரப் பெருமான் என உணர்ந்து அவரை நோக்கி தவமிருந்து நிறைவான ஞானம் அளித்தார்-காரகத்தான். கார்-மேகம். மேகம்போல் குளிர்ச்சியுடன் பக்தர்களுக்கு கருணை மழை. அக்ராய மன்னனுக்கு முன் வினைகாரணமாக தீராத நோய் ஏற்பட்டது. என்ன செய்தும் குணமாகவில்லை. ஒரு பெரியவர் காஞ்சியில் உள்ள கருனாகரனை நீராடி வழிபட அறிவுறுத்தினார். அக்ரேயர் காஞ்சி சென்றார். நீராட குளத்தை தேடினார். குளமில்லை. நீருமில்லை. அதிர்ந்த மன்னன் தன் சேனையை அழைத்து விடிவதற்குள் குளம் வெட்ட ஆணையிட்டான். குளம் வெட்ட நீர் வந்தது. சூரியன் வந்தான். மன்னன் குளத்தில் நீராட அவன் நோய் தீர்ந்ததை உணர்ந்தான். கருணை கடலான கருணாகரப் பெருமாளை ஆனந்தத்துடன் வழிபட்டான். அப்போது அரசவைக்கு வந்த முதியவருக்கு தான் அளித்த முத்துமாலை இறவன் கழுத்தில் இருப்பதை கண்டு ஆனந்தத்தில் கண்களில் நீர் சொரிந்தது. இறைவனே தன்னை நேரில் வந்து இங்கு அழைத்து வந்தது புரிந்தது.
திருநீரகம் திருப்பதியில் நிலைத்து நிற்பவனே! சொர்க்க லோகத்தில் இருப்பவர்களும் வழிபடும் திருப்பதி திருமாலே, நிலாத்திங்கள் துண்டத்தில் ஒளி வீசுபவனே, எல்லா வளமும் நிறைந்த காஞ்சிபுரத்தில் திரு ஊரகத்தில் எழுந்தருளியிருப்பவனே, திருவெஃகா ஆலயத்தில் இருப்பவனே, நினைத்தவர்கள் உள்ளத்தில் உறைபவனே, எல்லா உலகங்களும் புகழ்ந்து துதிக்கும் திருக்காரகம் என்னும் திருப்பதியில் வாழ்பவனே, திருக் கள்வனூரைச் சேர்ந்தவனே, அழகிய காவிரியின் தெற்குப் பக்கத்தில் இருக்கும் திருப்பேர்நகர் தெய்வமே என்னுடைய நெஞ்சத்தில் நீங்காது இருக்கும் பகவானே உன்னுடைய திருவடிகளை என் உள்ளத்தில் வைத்து வணங்குகிறேன்.-- திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)