ஊர்:பெரியகாஞ்சி.காமக்கோட்டம்#அ-104
மூலவர்: ஸ்ரீகாமாட்சியம்மன்-காமகோடி பீடத் தலம். நாபிஸ்தான பீடம், ஒட்டியாண பீடம். ஸ்ரீபங்காரு காமாட்சியம்மன். காமாட்சியம்மன் முன்னால் ஸ்ரீசக்கரம்.
இறைவன்: ஸ்ரீகாசீவிஸ்வநாதர்-தெற்கில்
இறைவி: ஸ்ரீசியாமளா, ஸ்ரீகாசிஅன்னபூரணி, ஸ்ரீஅஸ்திரிதேவி,
உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீதுர்காதேவி, ஸ்ரீபிலாகாஸ காமாட்சி, ஸ்ரீகள்ளவாரணராக திருமால்-திவ்யதேசம். ஸ்ரீஅரூபலட்சுமி- ஸ்ரீஅஞ்சனகாமாட்சி- ஸ்ரீகாமாட்சி. ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி, ஸ்ரீபூதநிக்ரஹபெருமாள்- ஸ்ரீகாமாட்சி (அம்மன்குளத்தின்அருகில்) நின்றான், இருந்தான், கிடந்தான்-சன்னதி. ஸ்ரீவராகி, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர். ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீஹயக்கீரீவர், ஸ்ரீசந்தான ஸ்தம்பம். ஸ்ரீஸ்தம்ப பிரதிஷ்டா, ஸ்ரீவிக்ன நிவாரண, ஸ்ரீஇஷ்டசித்தி, ஸ்ரீசௌபாக்ய, ஸ்ரீசந்தான, ஸ்ரீதிருமஞ்சன, ஸ்ரீவரசித்தி என ஏழு விநாயகர்கள்.
5நிலைராஜகோபுரம்.
மரம்-காஞ்சி
தீர்- பஞ்ச தீர்த்தம்(சிவன் தன் ஐந்து சடைகளிலிருந்து தோற்றுவித்தது), சர்வ ,கோவிலுக்கு எதிரில் ஞானக்கூபம், பஞ்ச மூர்த்திகள் உருவாக்கிய உலகாணி தீர்த்தம்.
தங்கத்தேர் , ஐந்து கால பூஜைகள்
தி.நே.06-1230,16-2030.
#16022007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
தொலைபேசி-044-27222609
சிவபெருமானின் பூதகணங்களின் தலைவன் சித்ரசேனன் சிவன் மன்மதனை எரித்த சாம்பலை ஓர் உருவமாக பிடித்து வைக்க அது பண்டாசுரனாக உருப்பெற்றது. சித்ரசேனன் சொன்ன மந்திரங்களை வைத்து தவம் செய்ய தோன்றிய சிவனிடம் தாம்பத்யம்மூலம் பிறந்த யவராலும் மரணம் ஏற்படாத வரம் பெற்று தேவர்களைத் பண்டாசுரன் துன்புறுத்த அவர்கள் ஈசனிடம் முறையிட, ஈசன் ஓர் வழி காண்பிக்க, அதன் வழி சென்றால் ஒரு மா மரம் இருக்கும் அதில் கிளிகளாக தவம் செய்யுங்கள் தேவி உங்களை காப்பாற்றுவாள் என்றார். அங்கே தேவியை வழிபட்டார்கள். தேவர்களை தேடிய பண்டாசுரன் அங்கு வர தேவி காலில் மிதித்து வதம். அவனைப் புதைத்த இடத்தில் ஜயஸ்தம்பம் நட்டனர். ஆலயம் எழுப்பினர். ஜயஸ்தம்பத்திலிருந்து துவாரம் எடுத்து காயத்திரி கதிர்கள் பரவிய எல்லையில் அதன் 24 எழுத்துக்களுக்கு 24 தூண்கள் எழுப்பினர்- காயத்திரி மண்டபம். ஸ்ரீசக்ரத்தின் முக்கோணத்தில் உறைபவள்- கர்ப்பகிரஹத்தை முக்கோணவடிவில் அமைத்தனர். விஷ்ணு ரத்ன கீரிடத்தையும், சிவன் ஸ்ரீசக்ர பதக்கத்தையும் அணிவித்தனர். தேவியின் விருப்பப்படி தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகியவற்றின் கோடியில் உள்ள மோட்சத்திற்கு அழைத்து செல்வதாலும், கோடி விருப்பங்களை- கோடி காமங்களை நிறைவேற்றுவதாலும் ஸ்ரீசக்ர பதக்கம் அருளிய ஈசனே இந்த காமகோடி பீடத்தை-ஸ்ரீசக்ரத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டுகோள். அவ்வாறே ஈசன் நிறுவினார். கிருதயுகத்தில் துர்வாசர் புதுப்பித்தார். த்ரேத யுகத்தில் பரசுராமரும், த்வபாராயுகத்தில் தௌமிய மகரிஷியும், கலியுகத்தில் ஜகத்குரு ஆதிசங்கரரும் புதுப்பித்தனர். இறைவனிடம் இருநாழி நெல் பெற்று அம்பிகை 32 அறங்களை செய்த தலம். காஞ்சி முழுமைக்கும் தேவி காமாட்சி. எனவே எந்த ஆலயத்திலும் அம்பாள் சன்னதி கிடையாது. சிவசாபத்தை நீக்க பார்வதி ஒரு காலில் நின்று வாமனரை தவம்- லட்சுமியும், பார்வதியும் பேசியதை மறைந்து பெருமான் கேட்டதால் பார்வதிதன் சகோதரனைக் கள்வன் என்றார். பெருமாளினால் சாபவிமேசனம் பெற்ற அரக்கனை பார்வதி துதிக்கிணங்கி நின்று, அமர்ந்து, படுத்து அழித்தல். சக்தி பீடங்களில் சிறந்த காமகோடிபீடம். பக்தர்களுக்கு கோடிகோடியாக சர்வ மங்களம் தருவதால் காமகோடி காமாட்சி. குங்குமத்தை திருமகள்மீது அர்ச்சித்தபின் நெற்றியில். முப்பெரும் தேவியரில் முதலிடம்- காஞ்சி மாகாட்சி, 2. மதுரை மீனாட்சி, 3. காசி விசாலாட்சி. அன்னை இங்கு 3 வடிவங்களில் காட்சி, 1.ஸ்தூலம்-கருவறையில் சொரூபகாமாட்சி, 2.சூட்சமம்-அருகில் அரூபலட்சுமி- அஞ்சனகாமாட்சி, 3.காரணம்-எதிரில் தொட்டிவடிவில்- ஸ்ரீசக்ரம். காமம்- விருப்பம். பக்தர்கள் விரும்புவதை தந்து அருளாட்சி- காமாட்சி. க-பிரம்மா, ம-மகாவிஷ்ணு, அ-சிவன் இந்த மூவரையும் உள் அடக்கியவள் காமாட்சி.தட்சன் யாகத்தீயில் பார்வதி விழுந்து உயிர் நீத்தபின் சிவன் அவ்வுடலை தோளில் வைத்து ஆடியபோது திருமேனியில் அன்னையின் நாபி விழுந்த இடம்- சக்திபீடம்-ஒட்டியானபீடம். காமாட்சி, விசாலாட்சி, மீனாட்சி மூவரும் கணகளால் அருள் புரிபவர்கள் ஆதலால் அபய ஹஸ்த முத்திரைகள் இல்லை. காமாட்சியின் திருவடிகளில் நவக்கிரகங்கள் தஞ்சம். மாசிமாதம் பிரமோற்சவம். ஒவ்வொரு பௌர்ணமிக்கு நவாவரண பூஜை சிறப்பு.
ஆகச பூபதி என்ற மன்னன் குழந்தை வரம் கெட்டு அம்பாளை வழிபட மகிழ்வுற்ற அம்மன் கணபதியை மகனாக அளிக்க துண்டீரர் என்ற பெயருடன் பிறந்து ஆகாச ராஜனுக்குப்பின் இப்பகுதியை அரசாண்டதால் இப்பகுதி மருவி தொண்டைமண்டலம் என்றானது. காமாட்சி அம்மனுக்கு எதிரே வணங்கிய நிலையில் துண்டீர மகாராஜா . கருவரையில் மூல விக்கிரகத்திற்கு அருகில் ஒற்றைக் காலில் தவம் செய்த நிலையில் காமாட்சி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)