ஊர்: புதுவாயல்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅகத்தீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஆனந்தவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை
மரம்:
தீர்:
தி.நே-0600-1200,1700-2000
அகத்தியர் பிரதிஷ்டை செய்த 108 லிங்கங்களுல் இது 107வது லிங்கம். அகத்தியர் தன் மனைவி லோபமுத்திரையுடன் காட்சி. அழகிய சிற்பங்கள் நிறைந்த கோவில்.
அந்த ஊரில் சந்தித்த இளைஞர்கள் பார்த்த ஓர் பிராணியைப் பற்றி சொல்லிக் கொண்டனர். ஒருவன் அது சிகப்பு என்றான். ஒருவன் அது பச்சை நிறம் என்றான். மற்றொருவன் அது நீல நிறமென்றான். ஒவ்வொருவரும் தங்கள் பார்த்த நிறம்தான் அந்த பிராணியின் நிறம் என வாதிட்டனர். தங்கள் கருத்தை உறுதி செய்ய அந்த மரத்தடிக்குச் சென்றனர். அங்கு வசித்தவனிடம் கேட்க அவன் நீங்கள் சொல்லும் நிறம் எல்லாம் அந்தப் பிராணியிடம் நானும் பார்த்திருக்கின்றேன் அதன் பெயர் பச்சோந்தி என்றான். அது சூழ்நிலைக்கேற்ப தன் நிறங்களை மாற்றிக் கொள்லும் சக்தி பெற்றது. அது போன்றே இறைவனும் அவரவர் பார்க்கும்போது அவரவர் நினைவிற்கு நிறத்தோற்றமுடையவராகக் காணப்படுகின்றார்.
அகத்தியர் வடமொழி அறிந்தவர். வடமொழி வல்லுனர்கள் வடமொழி ஒன்றுதான் சிறந்தது. என பலவாறாகப் புகழ்ந்தனர். அது ஏனே அகத்தியருக்குப் பிடிக்கவில்லை. தான் வடமொழியைவிடச் சிறந்த ஒரு மொழியை வளர்க்க ஆசைபட்டார். அப்போது அந்த குடிலின் மூலையிலிருந்து ஓர் மணம் வீசியது. அந்த வினோத மணம் என்ன வென்று முருகனிடம் கேட்க அவர் நீ வளர்க்க ஆசைப்பட்ட மொழி. வீட்டின் மூலையில் உள்ள பொதிகையிலிருந்து வருகின்றது என அகத்தியருக்கு தமிழில் போதித்து அவற்றை எடுத்துக் கொண்டு தென்னாடு செல் என அருள் புரிந்தார். தமிழ் வளர்க்க வேண்டியன செய்தார். இலக்கணம் மற்ற நூல்களை எழுதினார். இயல் இசை நாடகம் உருவாக்கினார். சிவன் அகத்தியருக்கு தன் ஐந்து முகங்களிலிருந்து ஆகமங்களை போதித்தார். வடமொழிக்கு மேலானா தமிழ் மொழியை அகத்தியர் வளர்த்தார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)