ஊர்:புதுச்சேரி,புத்திரன்சேரி,பொதுவை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநடேசுவரர், ஸ்ரீநடேசர், ஸ்ரீநடு ஈசர்,
இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபத்ரகாளி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபெருமாள், ஸ்ரீமுருகன், ஸ்ரீமகாலட்சுமி
மரம்:
தீர்: திருக்குளம். ஐந்துகால பூஜை. தி.நே-0700-1130,1700-2000
துர்க்கை வழிபட்டது. பசும் புலியாற்றின் அக்கரையில் அகத்தியர் ஆசிரமத்தில் தொடர்ந்து யாகம் நடக்க அது யக்ஞபுரியானது. மாடு மேய்க்கும் சிறுவர்கள் அவ்வழி செல்லும்போது யாகத்தைக் கண்டனர். எல்லா சிறுவர்களும் சேர்ந்து ஆற்றின் நடுவில் மணலால் ஒரு லிங்கம் செய்து வழிபட்டனர். மாட்டிலிருந்து பாலைக் கறந்து அபிஷேகம் செய்தனர். சிறுவனின் தந்தை இதைக் கண்டு மண லிங்கத்தை சிதைத்தார். அப்போது வியர்த்து மயங்கி விழ்ந்தார். சிதைந்த லிங்கத்திலிருந்து பத்ரகாளி தோன்றி ஆவேச நடனம் புரிந்து சிதைந்த லிங்கத்தை ஒன்று சேர்க்க அது நீள் செவ்வக வடிவில் இறுகியது. அவ்வழி ஆற்றைக் கடக்கும்போது பிரம்ம ரிஸி வசிஷ்டர் பார்த்தார். அம்மையப்பர் சிறுவனுக்கு காட்சி தந்தனர். பின்னர் அந்த இடத்தில் பந்தல் அமைத்து வசிஷ்டர் வழிபட்டார். புத்திரன் புகழ் விளங்க காரணமாக அமைந்ததால் புத்திரன்சேரி என்றும், புதியதாக சேரி மக்கள் வசிக்க ஆரம்பித்ததால் புதுச்சேரி என்றும் பெயர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)