ஊர்:ஸ்ரீபெரும்புதூர்.பூதபுரி,பூதமூர்.பூதனூர்,பூதீஸ்வரம்,பூதூர்,பெரும்பூதூர்.#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீபூதபுரீஸ்வரர், ஸ்ரீபூதனார், ஸ்ரீபூதநாதன், ஸ்ரீபூதநாயகன்
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீநடராஜர்,ஸ்ரீபைரவர்,ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீஆஞ்சநேயர்,
முகப்புவாயில்.
தீர்-பூதபுஷ்கரணி.
மரம்-மகிழ.
தி.நே.0600-1030,1600-1900
#16092011-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
இறைவனது ஆனந்த தாண்டவத்தினால் ஆடைகள் நெகிழ அதக் கண்ட பூத கணங்கள் சிரிக்க கோபங்கொண்ட ருத்ரன் கைலாயத்தை விட்டு அகல ஆணை. பூதகணங்கள் பிரம்மனிடம் முறையிட அருணாரண்யத்தில் 1000 ஆண்டுகள் கடும் தவம் செய்தன. பெருமாள் காட்சி யளித்து ஆதிஷேஷ தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபடச் சொன்னார். காட்சி கொடுத்த சிவபெருமானிடம் தங்களுக்கு உதவிய பெருமாளுக்கு கோவில் கட்ட விருப்பம் தெரிவிக்க சிவன் அனுமதியளித்தார். கட்டுமானம் தடைப்பட விநாயகருக்கு கோவில் கட்டினார்கள்-ஜெயபூத விநாயகர் ஆலயம் கட்டினார்கள். மகிழமரத்தடியில் சிவபெருமானுக்கு கோவில் கட்டினர்-பூதபுரீச்வரர் கோவில். அதன் பின்னர் பெருமாளுக்கு கோவில் கட்டினர். பூதங்களால் உருவாக்கப் பட்டதால் பூதபுரி. பஞ்ச பூதங்கள் வழிபடுவதால் பூதூர், ஊர் பெரியதாகையால் பெரும்பூதூர் என்றும் மங்களமாக இருக்க ஸ்ரீ சேர்த்து ஸ்ரீபெரும்புதூர் என்றாயிற்று. ரதி, மன்மதன் வழிபாடு. காரியஜெயம்,துர்மரணம் ஏற்படாமை, எதிரிநாசம் வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)