ஊர்:பெருஞ்சேரி,தருகாவனம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவாக்குவள்ளல்.வாகீசுவரர்
இறைவி: ஸ்ரீசுவாதந்திரநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
3நிலைராஜகோபுரம்
மரம்-பன்னீர்,
வி-இந்திர
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
800ஆண்டுகள் பழமை. மொழிகாட்டும் வள்ளல்-2/5.
ரிஷிகோயில். குருபகவான் வழிபட்ட வாகீசுவரர் அருள் தலம்- தேவகுருவாக பதவி. சரஸ்வதி சிவபூஜை செய்ததலம். தட்சனின் வேள்வியில் கலந்து கொண்ட சரஸ்வதி வீரபத்திரனால் மூக்கறுபட்டாள். இழந்த தன் அழகை மீண்டும்பெற இங்கு வழிபட்டு சிவஞானம், எல்லோர் நாவிலும் பேச்சுத்திறமை, வாக்கு சக்தி என 56 மொழிகளில் உலகில் பரப்பும் சக்தியைப் பெற்றாள்- வக்குவன்மை அளித்த வள்ளலார் கோவில்.
பிரம்மாவின் மகன் தேவர்குரு பிரகஸ்பதி மனைவி தாரை. மிகுந்த அழகுள்ளவள். நடந்தது. நடக்கவிருப்பது. வேதம், உபநிஷத்துக்கள் எல்லாம் அறிந்த பிரகஸ்பதி பிசாசு, மரம், செடி, கொடிகளின் பாஷைகளையும் அறிந்தவராவார். அவரின் மனைவியை சந்திரன் மயக்கி தன்னுடன் வைத்துக் கொண்டான். பிரகஸ்பதி கேட்டும் திருப்பி அனுப்பவில்லை. எல்லாம் அறிந்தவராயிருந்தாலும் விதி வலியது. மனம் நொந்த பிரகஸ்பதி பலசேத்திரங்கள் சென்று சிவனை வழிபட்டு பெருஞ்சேரி வந்தார். பஞ்சாட்சார மந்திரம் ஜபித்து தவம் செய்தார். சுவந்திர நாயகியை லிங்கத்தின் வடகிழக்கு மூலையில் ஸ்தாபித்து வழிபட்டார். ஒரு மாதம் பழம் மட்டும், பின் இரண்டு மாதம் பால், பின் அதுவுமின்றி நீர் மற்றும் காய்ந்த சருகுகளை உண்டு 12 ஆண்டுகள் தவம் செய்தார். பின் தன்னைச் சுற்றி அக்னி மூட்டி வழிபட தோன்றிய சிவனிடம் தன் சீடன் தன் மனைவியை பறித்ததை சொன்னார். சிவன் நினைக்க சந்திரன் அங்கு தோன்றினான். நீ துஷ்டன். உடனே தாரையை விடுவிப்பாய் என்றார். சந்திரன் அவ்வாறே செய்து தன் ஷயம் நீங்க வழிபட்டது- சோமேசர்லிங்கம்.
சரஸ்வதி மற்றும் வாயு வழிபட்டது- வாகீசர். தத்தத்தர் லிங்கம்- சோழமன்னன் வழிபட்டது. தத்தத்துச் சோழன் மக்களைத் தன் மக்களாக பாவித்து வந்தான். சிவன் மேல் பக்க்தி உள்ளவன்.
ஒருசமயம் யவன தேசத்து அரசன் பெரும் படையுடன் வந்து தனே பேரரசன் என்ற செருக்குடன் சோழநாடு வந்தான் ஒற்றர்கள் மூலம் தகவல் அறிந்த மன்னன் சிவனை வணங்கி மலைமகளை சரனடைந்து சுவாந்திரநாயகியை மாதம் முழுவதும் பூஜித்து வந்தான். மன்னனை தலை நகருக்கு செல்ல கட்டளையிட்டு மாரியம்மன் அவனுக்கு உதவுவாள் என அருள் புரிந்தாள். சில நாட்களில் மாரியம்மனால் யவனன் திரும்பி விட்டான் என்ற தகவல் கிடைத்து மன்னன் மகிழ்வு கொண்டான். லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)