ஊர்:திருச்செந்தூர்#மு-2/6 ,செந்திமாநகர், திருச்சீரலைவாய்
மூலவர்:1.ஸ்ரீசெந்தில்நாதன்-ஒருமுகம்-4கரங்கள்,ஜெயந்திநாதர்
2. ஸ்ரீசண்முகர்-ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானை.
3. ஸ்ரீகுமரவிடங்கபெருமான்-வில்லேந்தியவேலன்-மாப்பிள்ளைசாமி,
4. ஸ்ரீஅலைவாயுகந்தபெருமான்-ஒருமுகம்-4கரங்கள்,தோழன்சுவாமி.
முருகன்மார்பில்பதக்கங்கள் அறுகோணஷாடாட்சரயந்திரம்.
இறைவன்:ஸ்ரீகாசிவிஸ்வநாதன்,
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி.
தாயார்: உற்சவர்:1.ஸ்ரீசண்முகர், 2.ஸ்ரீஜெயந்திநாதர், 3.ஸ்ரீகுமரவிடங்கர், 4ஸ்ரீஅலைவாய் பெருமான். பிறசன்னதிகள்: ஸ்ரீஅம்பலவாணர்- ஸ்ரீசிவகாமசுந்தரி. ஸ்ரீஅஷ்டோத்ரலிங்கம். ஸ்ரீஆத்மலிங்கம். இடதுபுறம்-ஸ்ரீபஞ்சமுகசிவலிங்கம். ஸ்ரீவெங்கடாசலபெருமாள். தங்க,வெள்ளி சீபலிகள். ஸ்ரீதட்சிணாமூர்த்தி
9நிலைராஜகோபுரம்-137'உயரம்.
தீர்-நாழிக்கிண்று,கந்தபுஷ்கரணி.
தி.நே-05-21
#05-09-2007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(8)
தொலைபேசி-அலுவலகம்-04639-242221, குடில்கள், அறைகள்,விடுதிகள் பதிவு-04639-242271,பூஜைகள், தங்கரதம்,அர்ச்சனை,கட்டளைகள்-04639-242270
இணையம்-tirchendurmurugantemple.tnhrce.in
ஆறுபடைவீடு-2/6. ஆறுபடை வீடுகளில் கடற்கரையில் உள்ள தலம். மற்ற ஐந்தும் மலைக் கோவில்கள். ஜெயந்தி புரம் மருவி செந்தூராகி பின் திருச்செந்தூர் ஆனது. திருச்செந்தூர்- புனிதமும் வளமும் நிறந்த வெற்றி நாகரம். ஆலயம் ஓம் எனும் பிரணவ அமைப்பில். மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம் ஆக 3இனம் சேர்ந்தது. அகார, உகார, மகாரம் இனைந்தது. முருகு- இளமை, செம்மை, செழுமை, அருள், திறம், மணம் என்ற பொருள் உடையது. கோபுரம் கட்டிய பணியாளர்களுக்கு கூலி கோடுக்க முடியாமல் முருகனை வேண்டி இலையில் விபூதி பிரசாதம் தர தூண்டிகை விநாயகர் சிலை தாண்டியதும் விபூதி அவரவர் ஊதியமாக மாறியிருந்தது. பன்னீர் இலை விபூதி பிரசாதம் தீராத நோய்கள் தீரும். சூரபதுமனை போரில் அழித்து மயில்- சேவலாக ஆக்கிய தலம். வள்ளி குகை, நாளிக்கிணறு சிறப்பு. குருபகவான் அருள் பெற்ற தலம்- தட்சிணாமூர்த்தியின் வேத மந்திரங்களுக்கு விளக்கம்- சகலநன்மைகள்-குருத்தலம். தேவர்களை துன்புறுத்திய சூரபத்மனை அழிக்க படையெடுத்து வரும்போது வழியில் தாராசூரனையும் அவனுக்கு துனையாக இருந்த கிரஞ்ச மலையையும் அழித்துவிட்டு திருச்செந்தூரில் தங்கி வீரவாகுத்தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்ப, அந்த தூதை சூரபத்மன் நிராகரித்து வீரவாகுவை மரியாதை குறைவாக நடத்தி அனுப்ப, சக்தியிடம் வேல் பெற்று சென்றபோது சூரப்தமன் மாமரமாக மாறியிருக்க சக்திவேல் அதை இரண்டாகப் பிளக்க ஒருபகுதியை சேவலாகவும் மறுபாதியை மயிலாகவும் மாற கொடியாகவும் வாகனமாகவும் ஏற்றுக் கொண்ட முருகன் சூரசம்ஹாரத்திற்குப்பின் தான் சிவனை வணங்குவதற்காக கட்டிய கோவில். சஷ்டி விரதம் இருப்போர் முதலில் நாழிக் கிணற்றில் குளித்து பின் கடலில் குளிக்க வேண்டும். அருணகிரிநாதர்- திருபுகழ்(9-33)- பெற்ற தலம்.
இந்நகரின் காவல் தெய்வம் வீரவாகுத்தேவர்-வீரவாகுத் தேவருக்கு பூஜைநடந்த பின் மூலவருக்குப் பூஜை. மூலவருக்குப் பின்னால்- பாம்பறை-சுரங்க அமைப்பு-முருகன் பூஜித்த பஞ்ச லிங்கங்கள்.சிவனை வழிபட முருகன் உருவாக்கியது நாழிக்கிண்று-கந்தபுஷ்கரணி. இலைவிபூதி- பன்னீர் இலையில் விபூதி. விஸ்வாமித்திரர், ஆதிசங்கரர், முகரகுருபரர் வழிபட்டது. சந்தன மலைக் கோவிலாக இருந்து காலப்போக்கில் சந்தனக் குன்று மறைந்தாலும் அதன் சில பகுதிகள் பெருமான் சன்னதி அருகிலும், வள்ளி குகை அருகிலும் காணப்படுகின்றது. செந்தில்நாதர் மற்றும் சண்முகர் சன்னதிக்குப்பின் உள்ள லிங்கங்களுக்கு தீப ஆராதனை காட்டியபின் முருகனுக்கு ஆரதனை.
முருகன் தலங்களில் பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்தசஷ்டி விழாக்கள் நடை பெறும். 6 நாள் நடைபெறும் கந்த சஷ்டி ஏழாம் நாள் திருக்கல்யணத்துடன் நிறைவு அடையும். ஆனால் இங்கு 6 நாட்கள் கந்த சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாள் முருகன் தெய்வானை திருக்கல்யாணம். அடுத்த 5 நாட்கள் சுவமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என் 12 நாட்கள் விழா சிறப்பு.
பாரதம் முழுவதும் நடந்து சென்றதால் சங்கரரின் உடல் நலிந்து காச நோய் பீடித்தது அந்த நிலையிலும் திருக்கோகர்ணம் வந்து ஈசனை வழிபட்டார். அன்றிரவு ஈசன் கனவில் தோன்றி நோய்பபற்றி கவலைப் படவேண்டாம் .ஜயந்திபுரத்தில் முருகனை சந்தித்தால் உன் நோய் நீங்கும் என விபூதி அளித்தார். திடுக்கிட்டு விழித்த சங்கரர் ஈசன் அளித்த விபூதி கையில் இருப்பது கண்டு பராவசமாகி அதனை உடற்முழுவது பூசிக்கொண்டார். முருகன் சிக்கலிலே வேல் வாங்கி சூரபதுமனை வெற்றி கொண்ட ஜயந்திபுரம்-திருச்செந்தூர் சென்றபோது ஆதி சேஷன் வழிபட்டுக் கொண்டிருக்க புஜங்கம்- பாம்பு நடையில் ‘சுப்ரமண்ய புஜங்கம்’ பாடி முருகனை வழிபட அவர் காசநோய் நீங்கியது.
வரை படம்: விரிவாக்குண்(enlarge)