ஊர்:திருக்கண்டியூர் #.தி.த-129+மு+அ-48 ,கண்டனபுரம், ஆதிவில்வாரண்யம், பிரமபுரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபிரமசிரக்கண்டீசர், ஸ்ரீவீரட்டேஸ்வரர், ஸ்ரீபிரமநாதர், ஸ்ரீஆதிவில்வவனநாதர்
இறைவி: ஸ்ரீமங்களநாயகி-4கரங்கள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசப்தஸ்தான, பஞ்சபூதலிங்கங்கள். ஸ்ரீபிரம்மா-சரஸ்வதி. ஸ்ரீகல்பசூரியன். ரிஷபத்தில்-ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை.
5நிலைராஜகோபுரம்.
தீர்-நந்தி,தஷ,பிரம,குடமுருட்டியாறு.
மரம்-வில்வம்.
தி.நே-0600-1200,1600-2000
# 26-07-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டது-ஆதிவில்வாரண்யம். தன் ஐந்து தலைகளால் ஆணவம் கொண்டு மும்மூர்த்திகளில் தானே சிறந்தவன் என்ற கர்வங்கொண்ட பிரம்மன் சிரம் ஐந்தனுள் ஒன்றை சூலத்தால் கொய்ததால்-பிரம்மசிரம்கொண்டீஸ்வரர், அட்டவீரட்ட தலம்-1/8. திருவையாற்று சப்தஸ்தானத் தலம்-1/7. சாதாதாப முனிக்கு காளத்தி தரிசனம். மாசி 13,14,15,மாலை சூரியஒளி. சூரியன் வழிபாடு- பாஸ்கரத் தலம். மும்மூர்த்திகள் தலம். தன் கணவனால் பெற்ற அவப்பெயரை துடைக்க கணவருடன் தவம்- சரஸ்வதி தன் கணவருடன் உள்ள ஒரே தென்னாட்டு தலம். துரோணர் தும்பை மலர்கொண்டு இறவனை அர்சித்து மழலை வரம் பெற்றார். பிரதோஷ சிறப்பு. சித்திரை,வைகாசி திருவிழா. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
சித்ரவஜன் என்ற கந்தர்வன் தன் மனைவி குணவதியுடன் ஓர் வனத்தில் மகிழ்ந்திருந்தான். அந்தவழி சென்ற தேவலர்முனி அக்காட்சியை காண சகியாது சபிக்க சித்ரவஜன் அசுரனாகவும் குணவதி பலாச மரமாகவும் மாறினர். அகத்தியரின் சீடர் சதாதபர் திருக்காளத்தி செல்லும் வழியில் பேய்மழை பிடிக்க அருகில் இருந்த பலாச மரத்தடியில் ஒதுங்க அவர் காலடிபட்ட குணவதி மீண்டும் பெண்ணாக மாறினாள். அங்கு இராட்சதனாக இருந்த சித்ரவஜன் மீது தன் கஅண்டல நீரைத் தொழிக்க அவன் சுய ரூபம் அடைந்து அவரை வணங்கினர். சதாப ரிஷி தினமும் திருக்காளத்தி சென்று ஈசனை வழிப்பட்டு வந்தார். கடும் காற்றும் புயலும் மழையும் சேர்ந்து கொண்டதால் அவரால் வான்வழி சென்று காளத்திநாதனை அன்று வழிபட முடியவில்லை. ஏற்கெனவே செய்த சத்தியத்தின்படி ஒரு நாள் காளத்திநாதனை தரிசிக்காவிடினும் தீயில் விழுந்து மாள்வது என்பதை நிறைவேற்ற முயன்றார். அப்போது இங்கு வில்வமரத்தில் உமாதேவியுடன் காளத்தியப்பன் காட்சி தந்து அவரை ரட்சித்தார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)