ஊர்: நேமம், ஐராவதபுரம், புஷ்பபுரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபாரிஜாதவனேசுவரர், ஸ்ரீஐராவதேசுவரர், ஸ்ரீபிரம்மபுரேசுவரர், ஸ்ரீஇந்திரபுரீசுவரர், ஸ்ரீபுஷ்பபுரீசுவரர்
இறைவி: ஸ்ரீஅலங்காரவல்லி, ஸ்ரீஆதி அலங்காரவல்லி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீலட்சுமி நாராயணப்பெருமாள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன் -வள்ளி,தெய்வானை, ஸ்ரீகஜலட்சுமி
மரம்: வில்வம்
தீர்: பிரம்ம, சூதாகூபம், காவேரி
தி.நே-0630-1000,17-2000
நந்தி பகவான் இரண்டரை அடி பள்ளத்தில். காவிரியில் வெள்ளம் வரும்போது நந்தியின் காதுவரை தண்ணீர் ஊற்றெடுத்து நிற்கும்.
இரண்டு அம்மன் சன்னதிகள். ஆதிஅலங்காரவல்லி கானாமல் போனதால் புதிய அம்மன் அலங்காரவல்லி பிரதிஷ்டை. பின்னர் அர்ச்சகர் கனவில் தான் காவியாற்றின் மணலில் புதையுண்டு கிடப்பதாக சொல்லி மீண்டும் ஆதி அலங்காரவல்லி பிரதிஷ்டை. பிரம்மன் வழிபட்டதலம்.
சாலிகர் ரிஷி பெற்றோர்கள் ஒரே நாளில் இறைபதம் அடைந்ததால் அவர்களது ஈமக்கடன்களை முடித்து அவர்களது அஸ்தியை கங்கையில் கரைக்க நாரதரிடம் வழி கேட்டபோது இங்கு கரைக்கச் சொன்னார்-கயிலாயப்பதவி. சாலிகர் இங்குவந்து அஸ்தி கலசத்தை திறந்த போது அதில் உள்ள எலும்புகள் எல்லாம் லிங்கவடிவம் அடைந்திருக்க கண்டு ஆச்சரியப்பட்டு அப்படியே புதைத்தார். தன் பெற்றோர்கள் சிவநிலை அடைந்தது கண்டு ஆனந்தம் அடைந்தார். சுற்றியுள்ள மூன்று கிராம மக்களும் அங்கு இறந்தவர்களின் அஸ்தியை புனித ஆற்றில் கரைப்பதில்லை. பிரம்ம குளத்தின் கரையில் புதைக்கின்றனர். நான்கு யுகத்திலும் இருந்த சிவாலயம். கிரதயுகம்-பாரிஜாதவனம், திரேதாயுகம்-பிரம்மேசுவரம், துவாபரயுகம்-இந்திரநகரம், கலியுகம்-நேமம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)