ஊர்:திருநாட்டியத்தான்குடி.தி.த-235+அ-81.பாலக்குறிச்சி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமாணிக்கவண்ணர்,ஸ்ரீரத்தனபுரீஸ்வரர்,ஸ்ரீகரிநாலேஸ்வரர்,ஸ்ரீநாட்டியத்துநம்பி-
இறைவி:ஸ்ரீமலர்மங்கையம்மை. ஸ்ரீமங்களாம்பிகை
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீ விநாயகர், ஸ்ரீவிசுவநாதர், ஸ்ரீகஜலட்சுமி. ஸ்ரீவிஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி தெய்வானை. சோமாஸ்கந்தர், நடராஜர்-சிவகாமி.
5நிலைராஜகோபுரம்.
தீர்-சூரிய,கரி.
மரம்-மாவிலங்கை.
தி.நே-0700-1200,1700-2000
பஞ்சகூடபுரம்-1/5. கோட்புலி நாயனார் அவதாரத் தலம்.
சுந்தரர் பெருமைக்கேட்ட கோட்புலி நாயனார் திருவாரூர் சென்று அவரைச் சந்தித்து நாட்டியத்தான் குடிக்கு வர அழைப்பு விடுத்தார். சுந்தரர் நாட்டியத்தான்குடிக்கு வந்த கோவிலுக்கு சென்று இறைவனை கானாது விநாயகர் காட்டிய வழியில் செல்ல இறைவன் உழவு நடப்பார்த்த சுந்தரர் நட்ட நடாக்குறை நாளை நடலாம்`நாளை நடாக்குறை சேறு தங்கிடவே நட்டது போதும் கரையேறி வாரும் நாட்டியத்தான் நம்பி' என்று பாட இறைவன் மறைய மீண்டும் கோயிலுக்கு செல்ல பாம்பு தடுக்க பாடி தரிசித்தார்.
இரத்னேந்திர சோழமன்னனுன் அவனது தம்பிகளும் தந்தை விட்டுச் சென்ற இரத்தினங்களைப் பகிர்ந்து கொள்வதில் முரண்பாடு ஏற்பட நாட்டியத்தான் குடியில் இறைவனிடம் மணு செய்தனர். ஒரு நல்ல ரத்ன வியாபாரியை அனுப்புவதாகக் கூறித் தானே வியாபாரியாக வந்து அவர்கள் ஏற்கும் வகையில் இரத்தினங்களை பிரித்துக் கொடுத்ததால் இரத்தினபுரீஸ்வர, மாணிக்கவண்ணர் என்று இறைவனுக்குப் பெயர்.
தன் முன்பிறவி தோஷம் தீர யானை ஒன்று தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டதற்கு அருள் செய்ததால் கரிநாகேஸ்வரர்.
கோட்புலி தளபதியாக இருந்து வரும் வருமானத்தில் நெல் சேர்த்து இறைவனுக்கு படைத்து வந்தார். போருக்கு செல்லுமுன் உறவினரிடம் வரும்வரை நெல்லை பாதுகாக்க கூறிச்செல்ல பஞ்சம் வந்ததால் அனைவரும் நெல்லை தீர்த்துவிட இறைவனுக்கு சேர்த்தது தீரவே கோபம் கொண்டு அனைவரையும் வெட்டி மீதமிருந்த குழந்தையை வெட்டும்போது நெல்லையுண்ட தாயின் பாலைக் குடித்தது இதன் பாவம் எனக்கூறி வாளை ஓங்க இறைவன் தோன்றி அருள். 42/63-கோட்புலிநாயனார் அவதாரத் தலம்/. ஆடிமாதம் கேட்டை நட்சத்திரத்தில் கோட்புலி நாயனார் குரு பூஜை.
சுந்தரர்-பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)