ஊர்: மெலட்டூர், உன்னதபுரம்.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீ உன்னதபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீசிவப்ரியாம்பாள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0800-1100,1730-2030
சோமுகாசுரன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து வரம் பெற்றதனால் அகந்தைக் கொண்டு பிரம்மன் முன் தோன்ற, அசுரனைக் கண்ட பிரம்மன் அஞ்சி நிற்க உன் வலிமை இவ்வளவுதானா எனக்கேட்டு அவர் கையிலிருந்த நான்மறைகள் நான்கினையும் பறித்துக்கொண்டு கடலிற் சென்று மறைந்தான்.
என்ன செய்வது என அறியாமல் பிரமன், திருமாலிடம் முறையிட, கோபங்கொண்ட திருமால் மச்ச வடிவமெடுத்து கடலினுள் புகுந்து சோமுகாசுரனைக் கண்டு அவனுடன் சண்டையிட்டு அவனுடைய ரத்தத்தைக் குடித்து நான் மறைகளையும் மீட்டார். பிரம்மனிடம் அவைகளை ஒப்படைத்தார். ஆனால் அதன் பின்னரும் ஆவேசம் அடங்காமல் ஏழு கடலையும் ஒன்றுகூட்டி கலக்கினார். இதனால் உலக உயிர்கள் துன்பமடைந்தன. தேவர்கள் இதனை சிவபெருமானிடம் கூற மீன்பிடி வலைஞராக உருவெடுத்து ஏழு கடலையும் மறைக்கத்தக்கவாறு வலை வீச அந்த மீன் அகப்பட்டது. அதன் விழிகளைப் பறித்து அதன் வலிமையைக் குன்றச் செய்தார். தேவர்கள் விருப்பப்படி அந்த மீனின் கண்களை திருமேணியில் கையில் மோதிரமாக அணிந்தார். கண்ணிழந்த மீன் வடிவம் பெற்ற திருமால் தன் உணர்வு அடைந்து வைகுந்தம் சேர்ந்தார். அப்போது சிவன் உருவாக்கிய தலம் உன்னதபுரம்.
விஷ்ணு கயிலை சென்றபோது நந்தி தடுத்ததால் தன் கதாயுதத்தால் தாக்கியதால் கருடன் சதாரணப் பறவையாகவும் விஷ்ணு மனிதனாகப் பிறக்க சாபம். இரமராக வந்து சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்து வழிபட்டார். கருடன் சிவகங்கை தீர்த்தத்தில் மீன் பிடிக்க தன் சாபம் நீங்க கருடதீர்த்தம் ஏற்டுத்தி வழிபாடு. தேவ சிற்பி நகரின் எல்லைகளில் பிற தெய்வங்களை நிறுவி அழகு படுத்தியதால் மிலட்டூர் என்றாகி மருவி மெலட்டூர் ஆனது.
நீதிமான் கல்மாஷபாதன் என்ற சோழன், சிவபக்தன். தனக்கு மழலை வேண்டும் என்று அகத்தியர் ஆலோசனைப்படி இங்கு வந்து கோவில் சீரமைப்பு செய்து வழிபட்டு மக்கட் செல்வம் பெற்றான். வேதங்களுக்கு தாங்கள் இல்லாமல் கடவுளாஇ வணங்க முடியாது என்ற தலைக் கணம் ஏற்பட சவன் வேதங்களின் ஆற்றலை நீக்க, யாகங்கள் நடக்காமல் அவிர்பாகம் கிடைக்காமல் தேவர்கள் துன்பமடைந்து திருமால் ஆலோசனைப்படி உன்னதபுர்ம் வந்து வேதங்களுடன் வழிபட்டு பலனடைந்தனர்.
கணவமகரிஷி தடுத்தும் அவரை சரணடைந்த அந்தனரை புலி கவர்ந்து சென்றதால் வருத்தமுற்று பலதலங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று மார்க்கண்டேய மகரிஷியின் ஆலோசனைப்படி இங்கு வந்து வழிபட்டு தன் மனக்குறை நீங்கினார். சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய கதிர்கள் லிங்கத்தின்மேல். வைகாசி பிரமோற்சவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)