ஊர்:தேப்பெருமாநல்லூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவிஸ்வநாதர், ஸ்ரீருத்ராட்சேஸ்வரர்
இறைவி: ஸ்ரீவேதாந்தநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீஅன்ன தானதட்சிணாமூர்த்தி. ஸ்ரீமகாமந்திரபைரவர்:ஸ்ரீசாந்தபைரவர்,ஸ்ரீசனிபகவான், ஸ்ரீ கன்னிமூல கபால விநாயகர், ஸ்ரீநவகிரகங்கள்,ஸ்ரீமகாவிஷ்ணு,ஸ்ரீமுருகன்வள்ளிதெய்வானை. இரண்டு துர்க்கை நான்குகரங்கள்,8கரங்களுடன், ஸ்ரீராகு கேது ஒரே இடத்தில்
மரம்:வன்னிமரம்.
தீர்: பிரம்ம தீர்த்தம்
தி.நே-0700-1200,1700-2000
#03.06.2023-குருஸ்ரீ பயணித்தது
சிறப்புகள்:
சனிபகவான் நாளை ஏழேகால் நாழிகை ஈசனை பீடிக்கப் போகின்றேன் என்று அம்மையிடம் கூறிச்சென்றவன் அடுத்தநாள் வந்தபோது அம்மை ஒரு மரத்தின் அருகில் இருக்க அங்குதான் ஈசனும் இருக்கின்றார் என்பதை உணர்ந்த சனி அம்மரத்தை நோக்கியவாறு இருந்து ஏழேகால் நாழிகை முடிந்தபின் வந்த வேலை முடிந்துவிட்டது என்று அம்மையிடம் அகந்தையுடன் கூர அதைக்கேட்ட சிவன் மரத்தின் பின்னாளிருந்து வெளிப்பட்டு கோபத்துடன் மகா மந்திரபைரவ உரு எடுத்து சனியை இரண்டாக கிழிக்க கிளிக்கப்பட்ட சனி தவறு உணர்ந்து வேண்ட மீண்டும் உயிர் பெற்றார். ஈசனை வழிபட்டபின் சனிபகவானை வழிபட அதன் தாக்கம் நீங்கும்-தவறு நீங்கிய சனி.
இத்தல இறைவனை வணங்குபவர்க்கு மறுபிறவி இல்லை. அப்பேறு உள்ளவர்கள் தாம் இக்கோயில்க்கு வந்து தரிசிக்க முடியும் என்கின்றார் ஆலய குருக்கள். கர்ப்பகிரகம் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது. தினமும் காலையில் சூரிய ஒளி லிங்கத்தின்மேல்.
அன்னபறவைக்கு சாபவிமோசனம். நவகிரகங்கள் சூரியனை நோக்கிய வண்ணம். மகாமந்திர பைரவர் -வணங்கிடின் பயம் நீங்கி அனைத்து வளங்களும் பெருகும். குரு வாயு திசையை பார்ப்பதால் குருதோஷம், ராகுகேது தோஷம் நீங்கும்.
மகரந்த ரிஷி நந்தி அலித்த சிங்கமுக சாபம் நீங்க 50 ஆண்டுகள் வழிபட்டும் காட்சி கிடைக்கவில்லை வருந்தி கழுத்திலிருந்த ருத்திர மாலை கழற்றி லிங்கத்தின் அருகில் வைக்க காட்சி அளித்து சாபவிமோசனம். 22 ஆயிரம் ருத்ராட்சத்தினால் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கம்.சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் சார்த்தப்படுகின்றது. 1000 ஆண்டுகள் பழமை. அபிசேஷக ஆராதனைக்கு வசதியாக கல்லால் சிவலிங்கம் பிரதிஷ்டை.
கோகர்ண சித்தர் தனது தாயார் காளை மாட்டை அடித்து துன்புறுத்தியதையும், தன் மனைவி ஒர் நாயைக் கொன்றதையும் கண்டு உள்ளம் உடைந்து அனைத்தையும் வெறுத்து ஊர் ஊராக சுற்றி இறுதில் இங்கு வந்து தவம். தாயும் மனைவியும் இறந்து விட்டார்கள் என்ற செய்தி கிடைத்ததும் அவர்கள் செய்த பாவத்திற்கு நரகத்தின் துன்புறுவார்கள் என்பதால் அவர்களுக்காக பிரயசித்தம் செய்ய விரும்பினார். அந்த நினைவில் ஒரு சுலோகம் எழுத நினைத்தவர், 'தெரிந்தோ தெரியாமலோ செய்த பாபங்கள் பெரும்பாவமாக இருப்பினும்... என்று எழுதி விட்டு அடுத்த வரியை எப்படி எழுதுவது எனப் புரியாமல் அப்படியே வீட்டின் கூரையில் சொருகிவிட்டு நீராடி வந்து பார்க்கும்போது அதில்.. ஏகாந்தத்திலிருந்து சிவநாமத்தை உச்சரிப்பதே பிராயச்சித்தமாம். என்று முடிக்கப் பெற்றிருந்தது. ருத்ராட்சேஸ்வரரின் திருவருளே அது என ஆனந்தமுற்று தனித்திருந்து சிவநாமம் உச்சரித்து அந்த பலனை தன் தாய்க்கும் மனைவிக்கும் நீர்வார்த்து தர்ப்பணம் செய்து அவர்கள் பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்தார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)