ஊர்: கரிசூழ்ந்த மங்கலம், கரிசெயமங்கலம், கனகசபாபதி திருக்கோவில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசுந்தரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசுந்தராம்பிகை
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅனுக்ஞை விநாயகர், ஸ்ரீகனகசபாபதி, ஸ்ரீசாஸ்தா,ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை,ஸ்ரீ காலபைரவர், ஸ்ரீசனீஸ்வரர்,பூரணபுச்க்கலா-ஸ்ரீசாஸ்தா
மரம்: இரண்டு பிரஹாரங்கள்.
தீர்: தெப்பக்குளம், தீர்த்தக் கிணறு.
தி.நே-0800-1000,1730-2000
அருகிலுள்ள வனத்திலிருந்து யானைகள் இரை தேடி வருவதால் யானை-கரி சூழ்ந்த மங்கலம்- கட்டாரி மங்கலத்தை ஆட்சி செய்துவந்த வீரபாண்டியன் மணப்படைவீடு என்ற ஊரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்த முழுதுங்கண்ட ராமபாண்டியனிடம் செப்பறைத் தலத்தில் உள்ளது போன்று ஒரு நடராஜர் திருமேனியை தன் நாட்டிற்கு செய்து தர வேண்டினான், ராமபாண்டியன் சிற்பியை கூப்பிட்டு நடராஜர் சிலை வடிக்கச் சொல்லும்போது அதே போன்று ஒரு சிலையை வடித்து திருநெல்வேலிக்கு கொடுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவே இரண்டு நடராஜர் சிலைகளைச் செய்யச் சொன்னான். சிலையைப் பெற்றுக் கொள்ளவந்த வீரபாண்டியன் சிலையில் அழகில் மயங்கி இதே போன்று வேறு சிலைகளைச் சிற்பி செய்யக் கூடாது என்று நினைத்து சிற்பியின் கைகளை வெட்டிவிட்டான். தன் ஆட்களை சிலைகளை எடுத்துவரச் சொல்லி கிளம்பினான். இத்தகவல் அறிந்த ராம பாண்டியன் கடுங்கோபங்கொண்டு வீரபாண்டியன் மீது படையெடுத்து அவன்கரங்களை வெட்டினான். சிலையைக் கொண்டு வந்த வீரர்கள் நமக்கு வேண்டியது ஒன்றுதானே என்று ஒன்றை ஆற்றில் வீசிவிட்டுச் சென்றனர். ஆற்றில் போடப்பட்ட சிலையைக் தேடிக்கண்டு அதை நெல்லைக்கு எடுத்துச் செல்ல முயன்றபோது மன்னன் கனவில் தான் அங்கேயே இருக்க விருப்பம் தெரிவிக்க ராம பாண்டியன் அவ்விடத்திலேயே கோவில் கட்டினான்- கனகசபாபதி கோவில். அந்த இடமே கரிசெய் மங்கலம் மருவி கரி சூழ்ந்த மங்கலம் ஆனது.
மாறவர்மன் குலசேகரபாண்டியன் திருப்பணி.
சுழலும் லிங்கம் எனும் கண்கவர் சித்திர லிங்கம் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)